Friday, January 1, 2010

அல்வா கொடுக்க நினைச்சா....ஹி...ஹி...

பதிவெழுத பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமே இந்த இடைவெளி....படிப்பவர்களுக்காய் எழுதிய நாட்கள் போய் எண்ணங்களை எழுத்தாய் மொழிபெயர்க்கும் வித்தையின் நுட்பம் பழகவே இந்த பதிவினை உருவாக்கினேன். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியெதையும் செய்யவில்லை என்பதே உண்மை.

நேற்றைக்கு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இந்த ஒலிகோப்பு சிக்கியது. அமெரிக்காவில் பிழைக்கப் போன ஒரு இந்திய தம்பதி சம்பந்தப்பட்டது. காதலாகி கசிந்து கல்யாணம் கட்டிக் கொள்ளாமல் குடும்பங்களின் கூட்டனி இம்சையால் கல்யாணித்துக் கொண்டவர்கள் போலிருக்கிறது.



கணவணின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட திருமதி, கணவனின் களவாணித் தனத்தினை எப்படி துப்பறிகிறார் என்பதை பற்றியதே இந்த ஒலிக்கோப்பு. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்குமென்கிற நல்லெண்ணத்திலேயே பகிர்ந்து கொள்கிறேன். அதாவது...நண்பர்களே நீங்கள் யாரும் அசட்டுத் தனமாய் இம்மாதிரி மாட்டிக் கொள்ள கூடாதென்கிற நல்லெண்ணத்தில்....

3 comments:

  1. ஹா ஹா ஹா.

    ராஜுக்கும், நிக்கிக்கும் வச்சிட்டீங்களே ஆப்பு. இண்டைரக்டா ஜாஸ்மீனுக்கும்.

    ReplyDelete