Tuesday, December 15, 2009

மனசு விட்டு சிரிக்கலாமே....



எத்தனை நாளைக்குத்தான் கவுண்டரையும், வடிவேலையுமே பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது. இங்கே ஒரு திருமண நிகழ்வு...

பார்த்து மகிழுங்கள்....

Thursday, November 26, 2009

ஏழுமலையானின் நிஜ முகம்....!

திருப்பதி ஏழுமலையானை, சர்வ அலங்காரனாய் பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, 1970 களில் எடுக்கப் பட்டதாக கருதப்படும் இந்த வீடியோ கிளிப்பில், ஏழுமலையான் எந்த அலங்காரமும் இல்லாமல் அபிடேகதாரியாய் காட்சியளிக்கிறார்.

திருமலை மூலவர் விக்கிரகம் குறித்த சர்ச்சைகளின் காரணமாய் அவர் முழு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்டப்படுகிறார் என்கிற சர்ச்சை பன்னெடுங் காலமாய் இருந்து வருகிறது. ஒரு பதிவர் கூட இது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்ததாய் நினைவு...






http://www.youtube.com/watch?v=ybLBma5KwEo&feature=related

Saturday, November 21, 2009

தனிமையின் இசை...!



இருள் தரும் அடர்த்தி

ஒற்றை வயலின் மறைக்கும் சோகம்

இறுக்கம் நெகிழ்த்தும் தாளகட்டு

நேர்த்தியான சித்திரம் அசைவதை போல....

தொலைத்துவிட்ட தருணங்களை நினைத்து

அழுகலாம்தான்...ம்ம்ம்ம்

பொறுங்கள்....

இன்னமொறு தடவை கேட்டுவிட்டு வருகிறேன்.




In The Mood of Love என்கிற ஆங்கிலபடத்தில் வரும் இசைகோர்வையிது

Monday, November 16, 2009

நான் ஆளான தாமரை ரிமிக்ஸ்....

This feature is powered by Dishant.com - Home of Indian Music


”நான் ஆளான தாமரை” இன்றைக்கும் கிறு கிறுவென கிறங்கிப் போகவைக்கும் வயாக்ரா பாடல். நினைத்த மாத்திரத்தில் கிளுகிளுப்பு கிணற்றுக்குள் தள்ளிவிடும் இந்த பாடலை, பாக்கிய ராஜ் தனது மகன் கதாநாயகனாய் நடிக்கும் படத்தில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.

கேட்டுப் பாருங்கள்...என்ன இருந்தாலும் நம்ம ஷோபனா....ஷோபனாதான்.....

Thursday, November 12, 2009

வார்த்தைகளின் வலி....



நிசப்பதமான சூழல், தனிமையில்....மிக நிதானமாய் கேட்டுப் பாருங்கள்,நான் ரொம்ப நாளாய் தேடிக் கொண்டிருந்த வசனங்கள் இவை....

வலிகளை, இழப்புகளை இதனை விட கவித்துவமாய் பட்டியலிட இயலாது.

ம்ம்ம்ம்ம்ம்.....

Gareth used to prefer funerals to weddings. He said it was easier to get enthusiastic about a ceremony one had an outside chance of eventually being involved in. In order to prepare this speech, I rang a few people, to get a general picture of how Gareth was regarded by those who met him. Fat seems to have been a word people most connected with him. Terribly rude also rang a lot of bells. So very fat and very rude seems to have been a stranger's viewpoint. On the other hand, some of you have been kind enough to ring me and let me know that you loved him, which I know he would have been thrilled to hear. You remember his fabulous hospitality, his strange experimental cooking. The recipe for "Duck à la Banana" fortunately goes with him to his grave. Most of all, you tell me of his enormous capacity for joy. When joyful, when joyful for highly vocal drunkenness. But I hope joyful is how you will remember him. Not stuck in a box in a church. Pick your favourite of his waistcoats and remember him that way. The most splendid, replete, big-hearted, weak-hearted as it turned out, and jolly bugger most of us ever met. As for me, you may ask how I will remember him, what I thought of him. Unfortunately there I run out of words. Perhaps you will forgive me if I turn from my own feelings to the words of another splendid bugger: W.H. Auden. This is actually what I want to say: "Stop all the clocks, cut off the telephone, Prevent the dog from barking with a juicy bonel, Silence the pianos and with muffled drum Bring out the coffin, let the mourners come. Let the aeroplanes circle, moaning overhead Scribbling on the sky the message 'He is Dead'. Put crepe bows 'round the white necks of the public doves, Let traffic policemen wear black, cotton gloves. He was my North, my South, my East, and West. My working week and my Sunday rest, My noon, my midnight, my talk, my song; I thought that love would last forever: I was wrong. The stars are not wanted now; put out every one, Pack up the moon and dismantle the sun, Pour away the ocean and sweep up the wood; For nothing now can ever come to any good."

Sunday, November 8, 2009

குரு...சில எண்ணங்களும், தொடுப்புகளும்...

பிறந்ததில் இருந்து முடிவு வரையில் வித்தை அவசியமாகிறது. வித்தை எல்லோருக்கும் அமையாது, அது தந்திரம். தந்திரம் சுயமாய் வாய்ப்பதுமில்லை. தந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். எவன் உணர்ந்து கொள்கிறானோ அவன் மட்டுமே நிலைக்கிறான், ஜெயிக்கிறான்.

உணர்தல் என்பது உணர்த்துதல் என்கிற ஒன்றினால் மட்டுமே சாத்தியமாகும்....சாத்தியமாகிறது. உணர்த்துபவனுக்கு என தனி வரையறை ஏதும் இல்லை. அது எவனாகவும், ஏன் எதுவாகவும் கூட இருக்கலாம். எவன், எது என்பதற்குள் சகலமும் அடங்கியிருக்கிறது.

உணர்த்துபவன் எங்கிருந்தும் குதித்து வந்தவன் இல்லை, அவன் ஒரு சங்கிலி தொடரின் நீட்சியே !....உணர்ந்து கொண்டவனே உணர்த்துபவன் ஆகிறான். என் வரையில் இவனே வித்தையின் மூலமும் முடிவுமாய் இருக்க முடியும்.

காலம், கடவுள், காரணி, சுற்றம், சூழல், நண்பன், எதிரி, காதலி, மனைவி, மகன்......இவையே உணர்த்துபவைகள்...... உணர்த்துபவர்கள்

இவற்றையே நான் குருவென நம்புகிறேன்....அழைக்கிறேன்....மதிக்கிறேன்....வழி படுகிறேன்.

வழிபடுதல் என்பது அவன் அல்லது அது உணர்த்திய வழி நிற்றல் என்பதேயாகும். வழிபடுதலையும் தொழுதலையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தொழுதல் என்பது ஆராதனை மற்றும் அடிமையாதலின் எச்சம்.

இதையொட்டி சமீபத்தில் நான் படித்த ஒரு தொடுப்பினையும் படித்து பாருங்கள். திரு.பாலகுமாரனின் எண்ணங்கள் அவை....

http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_21.html



Thursday, November 5, 2009

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -3

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -2

இஸ்லாமிய தமிழறிஞர்கள், தமிழுக்கு தந்த மற்றொரு கொடை நாமா வகை இலக்கியங்களாகும். ”நாமே” என்கிற பாரசீக மொழியின் தழுவலாகவே நாமா குறிக்கப் படுகிறது. இதற்கு ‘வரலாறு' என பொருள் படும்.

அருஞ்செயலாற்றிய இஸ்லாமிய பெரியார்களின் வரலாற்றினை தருவதே இவ்வகை இலக்கியத்தின் நோக்காய் இருந்தது. தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருப்பதாய் தெரிகிறது. இவற்றுள் புகழ் பெற்ற சில நாமாக்களையும் அது தொடர்பான தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நூறு நாமா

மிஃஹ்றாஜ் நாமா

இருஷாது நாமா

சங்கறாத்து நாமா


நூறு நாமா அல்லது நூர் நாமா :

பாரசீக மொழியில் 'இமாம் கஸ்ஸாலி' என்பாரால் இயற்றப்பட்ட நூலின் தழுவலே இந்த நூறு நாமா. இதை நூர் நாமா என்றே அழைத்திட வேண்டும். நூர் என்கிற பாரசீக சொல்லுகு ஒளி என பொருள்தரும்.

'தொங்கல்'* எனும் செய்யுள் வடிவில் அமைந்த இருநூறு பாக்களில், இறைவன் ஒளியால் உலகத்தை படைத்தான் என்பதை மனித இனத்தின் வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நூல் இது. இதை இயற்றியவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த செய்யது அஹமது மரைக்காயர் என்பார் ஆவார்.

மிஃஹறாஜ் நாமா

அய்யம்பேட்டை மதாறு சாஹிபு புலவரால் இயற்றப் பட்ட இந்த நூல் நபிகள் நாயகமவர்கள் வானவர்கோன் ஜிஃப்ரீல்(அலை) அவர்கள் துனையுடன் விண்ணேற்றம் பெற்று இறைச் சந்நிதானம் அடைந்து மீண்ட வரலாற்றினை விவரிக்கிறது.இஸ்லாமியர்களின் ஐம்பெருங் கடமைகளை பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

இருஷாது நாமா

தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனை படைத்தான் என்கிற மரபு இஸ்லாத்தில் உண்டு. இதற்கு மாறாக இறைச்சிந்தனை இல்லாது, ஒழுக்கநெறி தவறி இம்மையில் வாழ்வோருக்கு மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் எத்தகைய தண்டனைகளை தருகிறான் என்பதை விளக்கிடும் நூல்தான் இருஷாது நாமா.

காயல் ஷமூனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது இந்த நூல். மனித குல மேன்மைக்கு தொழுகை எத்தனை அவசியமானது என்பதை வலியுறுத்தும் அருமையான நூல் இது. 'இர்ஷாத்' என்கிற அரபி நூலின் தழுவலே இருஷாது நாமா.

சக்கறாத்து நாமா

நாமா வகை இலக்கியங்களுள் மிகவும் புகழ் பெற்றது சக்கறாத்து நாமாவாகும்.பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாஹிபு அவர்களால் இயற்றப் பட்டது இந்த நூல். நூறு பாக்களை உள்ளடக்கிய இந்த நூல் பெரும்பாலும் 'தொங்கல்'* எனப்படும் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் ஆங்காங்கே வென்பாக்களும் இடம் பெற்றிருக்கிறது.

மரணம் என்பது மனிதகுலம் உட்பட எந்த ஒரு உயிரினமும் தவிர்க்க இயலாதது. மரணத்தின் அருகாமையில் மனிதன் அனுபவிக்கும் வலி மற்றும் வேதனை தொடர்பான அனுபவங்களையும், அவற்றில் இருந்து விடுபட தேவையான இறைச்சிந்தனை மற்றும் விவரித்துக் கூறும் நூல் இது.

* அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தையே இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் ”தொங்கல்” என வழங்குவர்

Wednesday, November 4, 2009

கண்டுக்கிட்டதும்....லூஸ்ல விட்டதும்....

என்னவோ சுய சரிதை எழுதற மாதிரி ஆளாளுக்கு மாய்ஞ்சு மாய்ஞ்சு இந்த தொடரை எல்லாரும் எழுதறாங்க! .....அட! நம்மளையும் ஆராச்சும் கூப்டுவாய்ங்களோ மாட்டாய்ங்களோன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, ஜீவன் கூப்டுட்டார்.

சரி, நம்மளும் கலந்து கட்டி அடிப்போம்னு லிஸ்ட் போட்ருக்கேன், பார்த்துட்டு சொல்லுங்க....

பிடிச்ச அரசியல் தலைவர் :
விளாதிமீர் இலியிச் லெனின்....

பிடிக்காத தலைவர் :
புர்ச்சி தலைவி

பிடித்த நடிகர் (நல்லா கவனிக்கனும்...நடிகர்!)
நாகேஷ்

பிடிக்காத நடிகர்
ஜெய் ஆகாஷ்

பிடித்த நடிகை...
யாரைன்னு சொல்றது...ஹி...ஹி..

பிடிக்காத நடிகை...
பரவை முனியம்மா

பிடித்த நகைச்சுவை நடிகர்...
டனால் தங்கவேலு

பிடிக்காத நகைச்சுவை நடிகர்...
விவேக்

பிடித்த ஆண் பாடகர்....
டி.எம்.எஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்

பிடிக்காத ஆண் பாடகர்....
பெண்மையின் நளினம் கூடிய குரலுடனான பாடகர்கள்...(இன்னிக்கு பாதி பயபுள்ளைக அப்படித்தான் பாடுது...ம்ம்ம்ம்)

பிடித்த பெண் பாடகி....
சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி

பிடிக்காத பெண் பாடகி
அனுராதா ஸ்ரீராம்

பிடித்த் இசையமைப்பாளர்...
மெல்லிசை மன்னர், அந்தக்காலத்து இசைஞானி

பிடிக்காத இசையமைப்பாளர்...
சங்கர் கனேஷ்

பிடித்த பதிவர்கள்...
எல்லா பெண் பதிவர்களும்...

பிடிக்காத பதிவர்கள்...
என்னைத் தவிர்த்த எல்லா ஆண் பதிவர்களும்....

பிடித்த கவிஞர்
காட்டாறு....(யாருன்னு கேட்ராதீங்க...அவுக மனசு கஷ்ட்டமாயிரும்)

பிடிக்காத கவிஞர்கள்
என்பதுகளில் இளையராசாவின் உச்சத்தில் அவரின் மெட்டுக்களுக்கு வார்த்தை நிரப்பிய எழுத்து யாவாரிகள்....(மானே...தேனே கவிஞர்கள்)

பிடிச்ச எளுத்தாளர்...(!)
வேற யாரு நாந்தேன்...

பிடிக்காத எளுத்தாளர் ...(!)
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதுவும் எனக்கே அளிக்கப் படுகிறது...!

அடுத்து அழைக்க நினைக்கும் பதிவர்கள்...

போதும் இத்தோட நிறுத்திக்குவோம்....!

Thursday, October 29, 2009

ராஜ ராஜ சோழருக்கு இன்னிக்கு பிறந்த நாள்....


ஐப்பசி சதய நட்சத்திர தினத்தில் பிறந்த சோழ சக்கரவர்த்தி ராச ராச சோழனுக்கு இன்றைக்கு (29-10-09)பிறந்த நாள். மேலே காண்பது அவரின் சிலையும் , அரிய சித்திரமும்.

Sunday, October 25, 2009

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -2


கீழேயுள்ள இனைப்பினை சொடுக்கி முதல் பாகத்தினை படித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.

இஸ்லாம் - தமிழ் : ஒரு வரலாற்றுப் பார்வை -1

முந்தைய பதிவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வகைகளை பற்றிய அறிமுகத்துடன் , மஸலா வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை படித்திருப்பீர்கள். தொடர்ச்சியாய் இந்த பதிவில் ”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி நான் அறிந்தவைகளை தருகிறேன்.

‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்ல்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.

கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.

சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

  • ஈசுபு நபி கிஸ்ஸா
  • அலி(ரலி) கிஸ்ஸா
  • இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
  • முகமது அனிபு கிஸ்ஸா
  • சைத்தூள் கிஸ்ஸா
  • ஷம்ஊன் கிஸ்ஸா
  • கபன் கள்ளன் கிஸ்ஸா


இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.


தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.


ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.


பதிவின் நீளம் கருதி இந்த அளவில் கிஸ்ஸா இலக்கியம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்கிறேன்....அடுத்த பதிவில் ”நாமா” வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


Wednesday, October 21, 2009

நிர்வாணம்...

அன்மையில் இனைய மேய்ச்சலில் இந்த வலைத்தளம் அகப்பட்டது. நிர்வாணத்தை ரசிக்க முடிகிறவர்கள் மட்டும் இதை பார்க்கவும்....

http://artnudes.blogspot.com/?zx=475b1c5aa140f0ea

மற்றவர்கள் கலாச்சார கூச்சலிட்டுக் கொண்டே இந்த பதிவினை விட்டு அகலலாம்.

Tuesday, October 13, 2009

ம்ம்ம்ம்ம்....

ஒன்றை நினைந்து
ஒன்றில் நிலைத்து
ஒன்றில் ஊன்றி
ஒன்றில் கரைந்து
ஒன்றாய் ஆவேனோ?
ம்ம்ம்ம்ம்

-இரண்டாய் கிடப்பவன்

தமிழ் மென்னூல்கள்

வலை மேய்ந்த பொழுதில் சிக்கிய தளமிது , பல தமிழ் மென் புத்தகங்களை திரட்டி வைத்திருக்கிறார். தரவிறக்கி பயன் படுத்திக் கொள்ளலாம்.

http://tamilebooksdownloads.blogspot.com/

Friday, October 9, 2009

புவனேஸ்வரியும் பின்னே ஞானும்....


புவனேஸ்வரியை வைத்து ஊடகங்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், எனதருமை வலையுலக கலாச்சார காவலர்கள் இந்த வாய்ப்பை பொங்கல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

எதாவது ஒரு பிரச்சினைன்னா கருத்து சொல்றேன் பேர்வழின்னு கெளம்பிடராங்க நம்ம பதிவுலக சிகாமணிகள். கவுண்டமணி சொல்ற மாதிரி இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலை நாராயணா !

நமக்கு அப்படியெல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு புத்தியில்லை, ஆனா கண்ணையும் கருத்தையும் கவரும் அவங்களோட அழகான படத்தையெல்லாம் வரிசை கட்டிப் போட ஒரு வாய்ப்பா நினைச்சி போட்ருக்கேன்.

குளிர குளிர பார்த்துட்டு போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியப் பாருங்கப்பூ....

ஸென் கதை : இயல்பாயிரு !

அது ஒரு மடாலயம். அந்த மடாலயத்தில் பெரிய தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒருவனுக்கு கிடைத்தது. அவன் அந்த தோட்டத்தை துப்புரவாக பெருக்கி, குப்பைகளை எல்லாம் ஒரு குழியிலே போட்டு வைத்திருந்தான். பசும்புற்களை வெட்டினான். செடிகளை சரியான இடத்திலே வைத்தான். தொலைவே நின்று பார்த்தான். தோட்டம் சுத்தமாக இருந்தது. வந்து குருவிடம் தோட்டம் சுத்தம் செய்து விட்டேன் என்று சொன்னான். ‘இல்லை. அங்கே பார்’ என்று சுட்டிக் காட்ட, அங்கே சில இலைகள் விழுந்து கிடந்தன. உடனே ஓடிப் போய் அந்த பழுத்த இலைகளையெல்லாம் அகற்றினான். மறுபடியும் குருவிடம் வந்து தோட்டம் சுத்தமாகி விட்டது என்று சொன்னான்.

அவர் இடது புறம் பார்த்து ‘இங்கே பார்’ என்று சொன்னார். அங்கே ஓடிப் போய் ஒரே ஒரு சுள்ளியை அப்புறப்படுத்தினான். இந்த குருவுக்கு ‘கழுகு கண் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்’ என்று அலுத்துக்கொண்டான். மறுபடியும் குருவிடம் ஓடி வந்து சுத்தம் செய்து விட்டேன் என்று கூறினான். குரு எட்டிப் பார்த்துவிட்டு ‘இல்லை. தோட்டம் சுத்தமாக இல்லை’ என்று சொன்னார். ‘ஒரு குப்பைகூட இல்லையே. சுத்தமாக இருக்கிறதே’ என்று கேட்டான். ‘இல்லை. தோட்டம் நன்றாக இல்லை’ என்று சொன்னார். அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாய். நீ பைத்தியக்காரனா, நான் பைத்தியக்காரனா. இவ்வளவு சுத்தம் செய்திருக்கிறேன் வேண்டுமென்றாலும் தோட்டம் நன்றாக இல்லை என்று சொல்கிறாயே’ என்று சொல்ல, குரு மறுபடியும் ‘ஆமாம். தோட்டம் நனறாக இல்லை’ என்று சொன்னார். ‘போடா’ என்று அவரைக் கண்டபடி ஏசி விட்டு குருவை விட்டுப் போனான். ‘நீயே சுத்தம் செய்துகொள்’ என்று சொன்னான்.

குரு கீழே இறங்கினார். சீடன் வியப்போடு பார்த்தான். குரு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழே போய் அதை உலுக்கினார். பனித்துளிகளும், இலைகளும் விழுந்தன. இன்னொரு முறையும் உலுக்கினார். இன்னும் இலைகளும், பூக்களும் விழுந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும் உதிர்ந்தன. இன்னொரு செடியைப் போய் உலுக்கினார். அங்கிருந்தும் இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்தன.குரு தன்னிடத்திற்கு வந்தார். எட்டிப்பார்த்தார். ‘இப்பொழுது தோட்டம் நன்றாக இருக்கிறது’ என்றார். சிஷ்யன் திகைத்தான். மறுபடி பார்த்தான். ‘எனக்கு புரியவில்லையே’ என்று பணிவோடு கேட்டான். ‘ஒரு தோட்டம் இலைகளோடும், பூக்களோடும், பிஞ்சுகளோடும், காய்களோடும் இருப்பதே இயல்பு. மிகச் சுத்தமாக இருப்பது ஒரு தோட்டத்தின் இயல்பல்ல. இயல்பாக இரு என்று சொன்னார். சிஷ்யன் தலைக்குனிந்து இயல்பாக இருப்பதற்கு அன்றிலிருந்து முயற்சி செய்தான்.

Monday, October 5, 2009

வாங்க எல்லாரும் பணக்காரனாயிடலாம்....

எல்லோரும் பணக்காரர்களாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் திரு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல வேண்டும்.இந்த கிரிவலத்தின் பெயர் குபேர கிரிவலம் என நாமாக பெயர் குறிப்பிட்டுக்கொள்ளலாம்.அந்த குபேர கிரிவலம் 14.12.2009 அன்று வருகிறது.அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தின் சன்னதியில் சாமி கும்பிடுங்க.


மேற்படி சமாச்சாரத்தை ஒரு வலைப்பூவில் படித்தேன்....பாருங்க எம்புட்டு ஈஸியா ஒரு வழியிருக்கு....

சித்தர்களுக்கான காயத்ரி மந்திரங்கள்....

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீ தன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்

Thursday, September 24, 2009

நானும் யூஸ்ஃபுல்லா பதிவு போடுறேன் !

தொலைபேசி /மொபைல்போன் வழி சேவைகள்

by krishnapriya கடைசியாக திருத்தம் செய்தது July 20, 2009 10:37 PM
சேவை அளிப்பவர் அளிக்கப்படும் சேவைகள் சேவைகளைப்பெறுவது எப்படி
கிஸான் கால் சென்டர் வேளாண் சார்ந்த
சந்தேகங்களும்
அதற்கான தீர்வுகளும்
1551 - என்ற எண்ணை அழைக்கவும்
இந்திய அரசின் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சகம தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புத் திட்டம் (NREGS)
பற்றி தகவல் பெற மற்றும்
புகார் கொடுக்க
1800110707 - என்ற எண்ணை அழைக்கவும்
சமூகநலம் மற்றும் தொழிலாளர் துறை, டெல்லி மாநில அரசு பிச்சையெடுக்கும்
குழந்தைகளை மீட்டு வருதல்
1098 - என்ற எண்ணை அழைக்கவும்
இரயில்வே பணியாளர் தேர்வாணையம், சென்னை விண்ணப்பத்தின் நிலை,
பணியிடத்திற்கான கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வுமுடிவுகள் குறித்த தகவல் பெற
6161 - என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புக
இந்திய இரயில்வே இரயில்வே பணியாளர் மீது
லஞ்ச/ ஊழல் புகார் கொடுக்க
155210 - என்ற இலவச எண்ணை அழைக்கவும்
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR) நிலவரம்,
பயணத்தில் இருக்கும் இரயிலின் நிலை,
இருக்கை வசதி நிலவரம்
& கட்டண விவரம் அறிய
139 - என்ற எண்ணை அழைக்கவும் பின்னர் 4 இலக்க வண்டி எண் அல்லது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்க
இந்திய இரயில்வே பிஎன்ஆர் (PNR)
நிலவரம் மற்றும்
பயணத்தில் இருக்கும்
இரயிலின் நிலை அறிதல்
9773300000 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்பு
தேர்வுகள் பற்றி உடல் ஊனமுற்ற குழந்தைகளின்
சந்தேகங்களுக்கு
விளக்கம் பெற
மாணவர்கள் அழைக்க வேண்டிய எண்கள்
டெல்லி : 9717882074
மும்பை : 9967800337
மும்பை : 9833950896
மும்பை : 9819209623
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ஆம் வகுப்புத்
தேர்வு முடிவுகள்
011 24357270 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்திய நலவாழ்வுத் துறை
ஆம்புலன்ஸ் மற்றும்
நோயாளிகளுக்கான
சுகாதார உதவி
அழைக்க வேண்டிய எண்:
102 or 1099
இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்களும் முறையீட்டாளர்களும் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளின் தற்போதைய நிலவரத்தை தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளுதல் அழைக்க வேண்டிய எண்:
- 011-4362062 &
011 4360112
பிற மாநிலங்களில்
வேளாண் துறை, மத்திய பிரதேச அரசு வேளாண்மை, தோட்டப்பயிர் வளர்ப்பு, மீன்பிடித்தல் கால்நடைவளர்ப்பு, பால்பண்ணை அமைத்தல் முதலியவற்றில் விவசாயிகளின் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் 18002334433 - என்ற எண்ணை அழைக்கவும்
வேளாண் துறை, ஹரியானா மாநில அரசு விவசாயிகளின் வேளாண் சார்ந்த பிரச்சனைகள் 9915862026 - என்ற எண்ணுக்கு எஸ்.எம். எஸ் அனுப்புக
ஹரியானா மாநில அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் பற்றி தகவல் பெற மற்றும் புகார் கொடுக்க 18001802023 - என்ற எண்ணை அழைக்கவும்
மத்தியப் புலனாய்வு அமைப்பு, இமாச்சலப் பிரதேச அரசு ஊழல் அதிகாரி மீது புகார் செய்ய 09418153535 - - என்ற எண்ணை அழைக்கவும். (அல்லது) 09418153535 என்ற எண்ணுக்கு ஊழல் அதிகாரி விவரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்புக
மத்தியப் புலனாய்வு அமைப்பு, ஆந்திரப் பிரதேச அரசு மத்திய அரசு ஊழியகள், பொதுத்துறை வங்கிகள், மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் செய்ய 040 24732768 (ஹைதராபாத்)
0891 2783333 (விசாகப்பட்டினம்) - என்ற எண்களை அழைக்கவும்
“ஜான்காரி” பீகார் மாநில அரசு தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தகவல் அறிய, முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளின் நிலை அறிய தகவல் பெறும் மனுக்கள் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளை பதிவு செய்ய 155311
மனுக்களின் நிலை அறிய 155310- என்ற எண்ணை அழைக்கவும் என்ற எண்ணை அழைக்கவும்.
கர்நாடக அரசின் மாநில பியூசி கல்வித்துறை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தேர்வுகள் பற்றிய கவுன்சிலிங் 080-23366778 (அல்லது)
080 23366779 - என்ற எண்ணை அழைக்கவும்
(03 p.m. to 4.30 p.m)
அவசர கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI),ஹைதராபாத் நோயாளிகளுக்கான மருத்துவ உதவி 108 - என்ற எண்ணை அழைக்கவும்
டெல்லி சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
-12525 (இலவச அழைப்பு)
-23070345 & 23073132
கேரளா சட்ட ஆலோசக ஆணையம் சட்ட ஆலோசனை மற்றும் உதவி அழைக்க வேண்டிய எண்:
- 9846 700 100
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) திடக்கழிவு மேலாண்மை ,வெள்ள நீர் வடிகால்,சாக்கடை, சாலை மற்றும் போக்குவரத்து,தொழிற்சாலைகள், லைசென்ஸ் சம்பந்தப்பட்டவிஷயங்கள்,தண்ணீர் விநியோகம,பூச்சி/கிருமி கட்டுப்பாடு,கட்டிடங்கள்,ஆக்கிரமிப்பு...குறித்த புகார்களை முறையீடு செய்தல் அழைக்க வேண்டிய எண்:
-1916
மும்பைப் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ரூ.20,000 வரையிலான சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி செலுத்துதல் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 57575
“Dr எஸ் எம் எஸ்” கோழிக்கோடு மாவட்டம், கேரளா எந்நேரத்திலும் செயல்படக்கூடிய அருகிலுள்ள சுகாதார சேவை மையங்கள், மருத்துவமனைகள் குறித்த தகவல்கள். மேலும் ரத்த வங்கிகளைத் தொடர்பு கொள்ள வழிகாட்டி, பரிசோதனை மையங்கள், தனியார் மருத்துவ மனைகள், சிறப்பு மருத்துவ மையங்கள்,
மாவட்டத்தில் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள்,அறுவை சிகிச்சை வசதிகள், செயற்கை சுவாசக்கருவிகள் குறித்த தகவல்களையும் பெறலாம்
முழு விலாச விபரங்களுடன் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 09446460600
கூர்கான் காவல் துறை,ஹரியானா அரசு விபத்து மற்றும் அபாய காலத்தில் காவல்துறை உதவி பெற எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டிய எண்- 9717595423

Monday, September 21, 2009

வலியைச் சொல்லும் வழி -2



“”

வலியைச் சொல்லும் வழி



”உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை கான வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்”

Sunday, September 20, 2009

நம்புங்க...டவுசர் இதெல்லாம் படிக்கறான் !



பெரிதாக்கி படிக்க மேலேயுள்ள் படத்தினை சொடுக்கவும்....

Tuesday, September 15, 2009

கல்வெட்டுக்களும் தமிழ்ச்சமூக வரலாறும்...

முனைவர்.மா. இராசமாணிக்கனார் எழுதிய “கல்வெட்டுக்களும் தமிழ்ச்சமூக வரலாறும்”, இந்த புத்தகத்தைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.சுவாரஸ்யமாய் போகிறது. அடுத்த பதிவு இந்த புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை...

இதுக்கெல்லாமா ஒரு பதிவு போடறது...என்ன கொடுமைடா சாமி !

Monday, September 7, 2009

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை....!



சமீபத்தில் ஆச்சர்யப்படுத்திய பாடல் இது!, பெரிதான கவிதைத்தனமான வரிகள் இல்லை...சிக்கலான இசைக்கோர்வையில்லை....மெலிசான ஆனால் சுகமான வரிகள். பாடலை கேட்ட பொழுதில் நா.முத்துக்குமாரை அடையாளம் காட்டிய வரிகள்.

கேட்டுப் பாருங்கள்.....

Tuesday, August 25, 2009

அறுந்தவைகள்.....

.........நிழல் விரித்த தரையின் ஊடேயான அயற்சி, வெயில் போர்த்திய் தரையில் தகிக்கும் அவசரம், எரிச்சல்தான் மண்டுகிறது.

........எதையாவது எழுதித் தொலைப்பதும் கூட நிமிடம் வளர்த்தலின் நுட்பம் அறிதலின் புரிதலாகவிருக்கும், தூக்கம் தொலைத்த கவலை.

........கட்டிட மேனியின் வழிந்த கரைகள், மாட்டுக் கொம்பின் சிவப்புச் சாயம்,ஏதேனும் தொடர்பிருக்கும்

Thursday, August 6, 2009

இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை

சமயங்கள் தமிழை வளர்த்தனவா, இல்லை தமிழால் சமயங்கள் வளர்ந்தனவா என்கிற தலைப்பு விவாதத்துக்குறியது

தமிழுக்கும் சமயங்களுக்கும் ஊடான தொடர்பினை விளக்கும் ஒரு பழம்பாடல் ஒன்று உண்டு....

”நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மான்புறு சீறாவும்”
நமது கல்வித் திட்டத்தில் தமிழ் இலக்கியம் குறித்தான பங்களிப்பில் இந்து மதம் சார்ந்த இலக்கியங்களே பெரும்பான்மையாக சேர்க்கப்பட்டது .கிருஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களின் படைப்புகள் பெயரளவிற்கே பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.

தமிழகத்திற்கும் இஸ்லாமிய உலகத்திற்குமான தொடர்புகளின் துவக்கமென பார்த்தால் பண்டைய காலத்திலான வர்த்தக தொடர்புகள் ஆதாரமாய் சொல்லலாம்.எனினும் தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்தது பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினாறாம் நூற்றாண்டின் துவக்கமென சொல்லலாம்.

தமிழ் இலக்கியத்தில் மரபு சார்ந்த பிரபந்த வகைகள் தொண்ணூற்று ஆறு இருப்பதாக தெரிகிறது.இஸ்லாமிய தமிழறிஞர்கள் அநேகமாய் தமிழின் எல்லா எல்கைகளிலும் சென்று எழுதியிருக்கிறார்கள்.

இதனையும் தாண்டி இஸ்லாமிய தமிழறிஞர்கள் தமிழுக்கு புதிதாக எட்டு இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவை முறையே....

மஸலா
கிஸ்ஸா
நாமா
முனாஜாத்து
படைப்போர்
நொண்டி நாடகம்
திருமண வாழ்த்து
அரபுத் தமிழ்

பதிவின் நீளம் கருதி எல்லா வகையினையும் தொட்டுத் தொடராது முதல் வகையான மஸலா வகையினை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்....

மஸலா என்பது அரபி வார்த்தையான மஸ் அலா என்கிற வார்த்தையின் மருவல் எனலாம். தொடர்புடைய தமிழ் அர்த்தமாய் தேடுதலும் தெளிதலுமெனலாம். கேள்வி கேட்டு அதன் மூலமாய் இஸ்லாமிய தத்துவங்களை விளக்குவதே இந்த வகை இலக்கியம்.

இந்த மஸலா வகையில் தமிழில் மூன்று நூல்கள் இருக்கின்றன.

1.ஆயிர மஸலாவென்று வழங்கும் அதிஜய புராணம்

2..நூறு மசலா

3. வெள்ளாட்டி மசலா
இவற்றுள் ஆயிர மஸலாவே காலத்தால் முந்தையது என தெரிகிறது. இதை இயற்றியவரின் பெயர் வண்ண பரிமள புலவர் என அறியப்படும் செய்கு முதலி இஸ்ஹாக்.1572 ம் ஆண்டு இந்த நூலை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார் என்பதும் வியப்பான ஒரு செய்தி. இந்த நூலில் 1095 பாடல்கள் உள்ளன.

வெள்ளாட்டி மஸலா என்கிற நூல் காலத்தால் பிந்தையது. 1852 ம் ஆண்டில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பாரால் இயற்றப் பட்டது .வசன நடையில் உள்ள ஒரே மஸலா இதுவேயாகும். தமிழில் உள்ள மூன்று மஸலாக்களில் இதுவே சிறந்ததாய் கருதப் படுகிறது.

மூன்றாவது மஸலாவான நூறு மஸலாவினை எழுதியவர் பெயரோ அல்லது வெளியான காலக்குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனினிம் இந்த நூல் 1872ம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்கிற தகவல் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.

மற்ற மஸலாக்களை விட இந்த நூறு மஸலாவே அதிகமாய் பதிப்பிக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பினை உணர்த்தும்.

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறைவு செய்தாலும் மற்ற வகைகளைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

ஐம்பது வயது அழகு.....!




ஷரன் ஸ்டோன் யாரெனெ கேட்பவர்கள் இந்த பதிவினை படிக்க வேண்டாம்....ஐம்பத்தியொரு வயது அழகி, இத்தனை வயதிலும் கட்டுக்குலையாத அழகு....

ஹி..ஹி....நமக்கில்லை...நமக்கில்லை....