Monday, August 2, 2010

டவுசரை கழட்டீட்டு.....

டவுசரை கழட்ட வேண்டிய நேரம் வந்தாச்சி...வில்லங்கமா யோசிக்காதீங்க!, அடுத்து என்னன்னு கடைசி வரில சொல்றேன்.வழிதவறி பதிவுலகம் பக்கமா வந்து ஆறு வருசம் ஓடிப் போச்சு, நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்னு வருசத்துக்கு ஒரு பேரோட ரவுண்ட் வந்தாச்சு.

நான் உள்ள வந்தப்ப தீவிரமா இயங்கிட்டு இருந்த பலரை இன்னைக்கு காணோம்.விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் மட்டுமே இப்ப இயங்கீட்டு இருக்காங்க...அதுல நம்மளும் ஒருத்தன்னு நெனைக்கும் போது..ம்ம்ம்ம்...அட கண்ணுல தண்ணி(இதான் நமக்கு நாமே திட்டம்..ஹி..ஹி).இங்கே எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் எவரும் இல்லை.எதிரிகளும் இல்லை....ஆனால் நட்பு கொண்டாடியிருக்கிறேன், எதிர் கூச்சல் இட்டு கோவத்தை காட்டியிருக்கிறேன்.

கடந்து போன இந்த வருடம், தனிப்பட்ட முறையில். தொழில் ரீதியாக நான் மரண அடி வாங்கிய ஆண்டு. அநேகமாய் தெருவுக்கு வந்த ஆண்டு என்றே சொல்லலாம்.மீண்டு விட முடியுமென்றாலும், வலிகளின் தீவிரம் தணித்த காரணிகளில் பதிவுலகத்திற்கும் பங்குண்டு.

அடையாளங்களை தூக்கிப் பிடித்து என்னை மிகை மனிதனாக காட்டிக் கொள்ளாததே, இன்னமும் இங்கே நிலைத்திருக்க காரணமாயிருக்கலாம்.விருப்பு வெறுப்பில்லாது வேடிக்கை பார்க்கிறவனாய் மட்டுமே இருந்ததினால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.சலிப்புகள் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்....

சதயம், பங்காளி,இரண்டாம் சொக்கன், யட்சன் வரிசையில் இனி டவுசர்பாண்டியும் எனது பதிவுலக சுவடுகளில் ஒன்றாயிருக்கும்.புதிய அவதாரங்கள் தொடரும்....பகவான் மட்டும்தான் அவதாரமெடுக்க முடியுமா என்ன?

எழுத வேண்டியது நிறைய இருக்கிறது....பிரபல பதிவராகாவிட்டாலும், அனைவருக்கும் பிடித்த பதிவராகவாவது இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.....

அதுனால...

டவுசரை கழட்டீட்டு வேட்டிய மடிச்சு கட்டீட்டு வேறோரு பெயர்ல விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்... :))

Monday, July 5, 2010

ஒரு பின்னூட்ட பதிவு...

பதிவர் மங்களூர் சிவா அவர்களின் பதிவுக்கு எதிர்வினையாற்றி திருவாளர் செந்தழல் ரவி அவர்களின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்....

பின்னூட்டம் வெளியிடப் படுமா என தெரியாத சூழலில் எனது பதிவில் அந்த பின்னூட்டத்தை பதிந்து வைப்பது அவசியம் என நினைக்கிறேன்...வரலாறு முக்கியமில்லையா! :)


//எங்கள் வீட்டு பெண்ணை அவதூறு செய்து எழுதியுள்ள இந்த பதிவுக்கு எதிர்வினை இது.//

சமீப நாட்களில் கிருபா நந்தினி மற்றும் தோழி என்கிற பெண்பதிவர்களை விமர்சிக்கும் போது எந்த மாதிரியான வார்த்தையாடல்களை உங்கள் பதிவில் பயன் படுத்தி இருந்தீர்கள் என்பதை உங்களின் சுயபரிசோதனைக்கே விட்டு விடுகிறேன்.....

திருவாளர் பைத்தியக்காரன் எழுதிய பதிவு, திருமதி சந்தன முல்லை அவர்களின் மேலான பார்வைக்கு அனுப்ப பட்ட பின்னரே, மகாகனம் பொருந்திய வினவு அவர்களின் பதிவில் வெளியிடப் பட்டது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் பதிந்திருக்கும் சூழலில்....

மங்களூர் சிவா மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நிரூபிக்கும் அல்லது மறுக்கும் தார்மீக உரிமை திருவாளர் பைத்தியக்காரனுக்கும், திருமதி சந்தனமுல்லைக்கும், மகாகனம் பொருந்திய வினவுக்கும்தான் இருக்கிறது....இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரியவில்லை.

மங்களூர் சிவாவின் பதிவிற்கு மறுப்பு சொல்ல வேண்டியது திருவாளர் பைத்தியக்காரனும், திருமதி சந்தன முல்லையும், மகாகனம் பொருந்திய வினவும்தானே தவிர நீங்கள் இல்லை.....

திருமதி.சந்தனமுல்லை தனது தனித்துவம் பாதுகாக்கப் பட வேண்டுமெனவும், தனக்காக எவரும் உள் நுழைவதை அவர் விரும்பவில்லை என, தனது அருமை கணவருக்கே தடை போட்ட தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை நீங்கள் மதித்திருக்க வேண்டும்.

இந்த பதிவை இடுவதற்கு முன்னர் அவரிடம் அனுமதி கேட்டிருப்பீர்களேயானால் நீங்கள் உஙகள் வீட்டு பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிப்பவராக எடுத்து கொண்டிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் கேட்டு திருமதி சந்தனமுல்லை உங்களுக்கு அனுமதி அளித்திருப்பாரேயானால் அவரின் ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மீதான மரியாதை நொறுங்கிப் போய்விடுகிறது.

மங்களூர் சிவாவை கடித்துக் குதறுவதாக நினைத்து நீங்கள் அசிங்கப் படுத்தியிருப்பது உஙகள் வீட்டுப் பெண்ணைத்தான், மீண்டும் ஒரு தடவை செந்தழல் ஒரு அவசர கருத்தாளர் என்பதை நிருவியிருக்கிறீர்கள்....


.

Sunday, July 4, 2010

வாக்கா...வாக்கா....

உலக கோப்பை கால்பந்து இறுதி கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நான் கொஞ்சம் எதிர்பாராத அணிகள் எல்லாம் அரை இறுதிக்குள் வந்து விட்டன. விடிய விடிய முழித்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். நான்கில் மூன்று ஐரோப்பிய அணிகள்....காலாலே கவிதை எழுதிய தென் அமெரிக்க அணிகள் இல்லாத நிலையில் இனி கோப்பை ஸ்பெயினுக்கு போனால் சந்தோஷப் படுவேன்.

ஜெர்மனி வீரர்கள் நிச்சயம் பேயாட்டம் ஆடுகிறார்கள்....அர்ஜெண்டினா பரிதாபமாய் சரணடைந்தது. சமீபத்தில் ரொம்பவே வருத்தப் பட்ட தருணம் அது!

ஊதித் தொலைக்கிறேனென ரசிகர்கள் ஊதிய ஊதல் சத்தம் நமக்கு காது கிழிகிறது, எப்படித்தான் விளையாடுகிறார்களோ?.

வீரர்களுக்கு இனையாக டிவி கேமராக்களின் கவனிப்பை பெற்றவர் மரடோனா....உணர்ச்சி பிழம்பாய் நவரசங்களையும் காட்டினார்.எனக்கு அடிக்கடி நம்ம டி.ஆர் நினைவு வந்து தொலைத்தது. எங்க அம்மா மரடோனா பத்தி சொன்ன ஒரு கமெண்ட் இந்த இடத்தில் பதிந்து வைக்கனும்....அவங்க சொன்னது

“இவன் ஏண்டா பந்து மாதிரி இங்கயும் அங்கயும் உருண்டுட்டு இருக்கான் ”

தென் ஆப்ரிக்கா நிஜமாகவே அசத்தி விட்டார்கள் , குளறு படிகள் இல்லாத உலக கோப்பையாக இது இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும், மைதானத்துக்குள் பெரிதாக காவலர்களையோ அல்லது அதிரடி படையினரையோ காண முடியவில்லை....

அழகான பெண் ரசிகைகளை காணமுடியவில்லை அல்லது காட்ட வில்லை....

இந்த குறையை தீர்க்க ஷக்கீராவின் வாக்கா வாக்கா....கீழே,

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு ஒரு அதீத அதிர்வு இந்த பெண்ணிடம் இருக்கிறது...அதிர்வுன்ன உடனே ஏடா கூடமா எதையாவது பார்த்துட்டு இருக்காதீங்க....ஹி..ஹி....நான் சொல்ல வந்தது எனர்ஜி லெவல்.

காமரூனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய பாடல்தான் இது, 1986 களில் Golden sounds என்ற் குழுவின் பாடலாக இதை வெளியிட்டிருந்தனர்.இரண்டாம் உலகபோரில் கலந்து கொண்ட ஆப்ரிக்க வீரர்களின் நினைவை போற்றும் இந்த பாடலை ஷக்கீரா உலககோப்பை கால்பந்துக்கு பிரபலமாக்கி விட்டார்.....ஆனால் இந்த பாடல் உலக கோப்பைக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்கிற கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை...

வாக்கா வாக்கா...ன்னா ”கடமையை செய்”...ன்னு அர்த்தம் வரும்

முதல்ல ஒரிஜினல் அப்புறம் ஷக்கீரா....பார்த்துட்டு சொல்லுங்க எது டாப்புன்னு....

ஒரிஜினல்...




இது கொலம்பிய குத்துவிளக்கு ஷக்கீரா பாடினது....


Saturday, June 26, 2010

கவித மாதிரி...ஆனா கவித இல்ல...!




நீ எழுதிய முதல் காதல் கடிதத்தை

என்னிடம்தானே கொடுத்திருப்பாய்!

உன் வீட்டு குப்பைத் தொட்டியாய் இருந்திருக்கலாம்....

ம்ம்ம்ம்ம்.....



இதோட காப்பிரைட், டீரைட் எல்லாம் என்கிட்டதான் இருக்கு!, அதுனால யார் வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம் :)

Sunday, June 20, 2010

எழுத மேட்டர் இல்லை அதான்......!

எழுதி நாளாகிறது !

இதனால் யார் குடியும் கெட்டுப் போகவில்லை என்பதுதான் நல்ல செய்தி.

இடைக்காலத்தில் என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தேன்.... ”கொலதெய்வம்” நமீதாவை ட்விட்டரில் தொட்டதை வரலாற்று சம்பவமாய் பதிந்து வைக்கலாம்.”இப்பல்லாம் நமீதாவோட அடிக்கடி பேசுறேன் பாஸ், ராத்திரி ஆனா அந்த புள்ள மச்சானுக்கு குட்நைட் சொல்லாம தூங்கறதே இல்லைன்னு இனி ட்விட்டர் புரியாதவனிடம் கதைவிடலாம்.....ம்ம்ம்ம்

சமீபத்தைய நர்சிம், முல்லை ”சதிராட்ட”த்தில் நானும் நர்சிம் பக்கமாய் நின்று எதிர் பதிவுகளில் எல்லாம் போய் கூவி வைத்தேன். இத்தனைக்கும் நர்சிம்மின் எழுத்துக்களையோ, முல்லையின் பதிவுகளையோ பெரிதாய் வாசித்ததில்லை. ஆனால் நர்சிம் தரப்பு நியாயங்கள் கலாச்சார போர்வையின் கீழே போட்டு மிதிக்கப் பட்டதாக நம்பினேன்....மற்றபடி இருவரைப் பற்றியும் எனக்கு பெரிதான அபிப்பிராயங்கள் இல்லை.

”பெரியார்” படத்திற்கு பெரியவர் இசையமைக்கச் சொல்லி கேட்டும் இசைஞானி மறுத்துவிட்ட வருத்தமே, செம்மொழி மாநாட்டு பாடல் வாய்ப்பில் ஓரம் கட்டப் பட்டாராம்.ஞானியால் புயலுக்கு வாய்ப்பு....நம்ப தகுந்த ஒருவர் சொன்ன சேதி இது....நான் நம்பி விட்டேன்!

சாரு நிவேதிதாவின் பதிவுகளை நெம்ப காலமாகவே வாசித்து வருகிறேன்...அருமையான பத்தி எழுத்தாளர் ஆனால் சமீப காலமாக மனுஷன் எழுத்துலக வடிவேலுவாய் சிரிக்க வைக்கிறார். அவர் போடும் ஜட்டியில் இருந்து , வீட்டு நாய் மூச்சா போன கதை வரை எழுதிவிட்டு அதை ஒலக இலக்கியமாய் ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் வாசகர் மெயில் என்கிற போர்வையில் அவரே கஷ்டப்பட்டு ஒளிவட்டம் ஏற்றுவது அபத்தமாய் இருக்கிறது. அவர் தளத்துக்குப் போனால் கவலை மறந்து சிரித்து விட்டு வர நான் கேரண்டி...சமீபத்தய காமெடி ஷேக்ஸ்பியரின் ஈ-மெயில் ஐடி அவரிடம் கிடைக்கலாம் என்பதாக ஒரு பில்ட்டப்!.

நண்பர் கொடுத்த நிறைய ஆங்கில பட டிவிடி க்களை கையில் வைத்துக் கொண்டு பார்க்க நேரமில்லாது அலைந்து கொண்டிருக்கிறேன்.... விமர்சிக்கிறேன் பேர்வழி என ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பதிவுபோட்டு உங்களை இம்சை படுத்தமாட்டேன் என்கிற உத்திரவாதத்தை மட்டும் இப்போதைக்கு தர முடியும்.

Monday, May 31, 2010

நர்சிம், சந்தனமுல்லை தொடர்பான வினவின் பதிவிலிட்ட பின்னூட்டம்

இந்த பதிவினை படித்த வரையில்,பிரச்சினையை துவக்கியது நர்சிம் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இதுல எதுக்கு அவன் பருப்பு, இவங்க பித்தளைன்னு கலர் பூசூறீங்கன்னு தெரியலை....

உங்களுக்கு பார்ப்பனர்களை திட்ட ஒரு வாய்ப்பு, அதை செம்மையாய் செய்ய சந்தன முல்லை என்கிற பிற்படுத்தப்பட்ட சமூக பெண்மணி கையில் கிடைத்திருக்கிறார். வன்புணர்ச்சி, வெங்காயம்னு....நரசிம்மை போட்டுத் தாக்குவதாய் நினைத்துக் கொண்டு சந்தனமுல்லையினை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்.

இந்த கேப்பில் இடது சாரி இம்சையை வேறு கடை விரித்திருக்கிறீர்கள்.கார்க்கி,அபி அப்பா, லதானந்த், மங்களூர் சிவா இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது கூட வன்புணர்ச்சிதான்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கே நீங்கள் உட்பட எவனும் யோக்கியனில்லை. சுதந்திரவெளி...கருத்து கந்தசாமியாய் தீர்ப்புச் சொல்லி மற்றவனை காயடிக்க துடிக்கும் கருத்துச் சுதந்திரதை உங்களுக்கு எது தந்ததோ அதே சுதந்திரம் நர்சிம் மற்றும் பிறருக்கு உண்டு.

.வம்புச் சண்டைக்குப் போகக் கூடாது, அதே நேரத்துல வந்த சண்டைய விடக் கூடாது....அதுதான் இங்கே நடந்திருக்கிறது. கத்தியை தூக்கும் போதே கத்தியால் இறக்க தயாராக இருக்க வேண்டும்.

போய் அம்மாவிடமும், அய்யாவிடமும் குண்டியை சொறிந்து கொண்டு பதவிக்காக நிற்கும் உங்கள் தோழர்களை புத்தி சொல்லி அழைத்துவாருங்கள்....அதை விடுத்து இம்மாதிரியான ஒளிவட்டங்களாய் நீங்கள் போதிப்பது உங்களின் அம்மணத்தையே வெளிச்சமாக்குகிறது.

Sunday, May 9, 2010

இதுதான் குறும்படம்.....



தமிழில் குறும்பட இயக்கம் பெரிய அளவில் வளராததன் காரணம், வருமான வாய்ப்பு இல்லாததுதான் என நினைக்கிறேன். நான் பார்த்த சில தமிழ் குறும்படஙகள், இனி தமிழில் குறும்படங்களே பார்க்கக் கூடாது என்கிற நினைப்பினை தந்தன என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு பதிவர் உண்மைத் தமிழனின் படத்தினைச் சொல்லலாம்.

கருத்தாக்கம், காட்சிகளை பிரித்தல், துல்லியமான படத் தொகுப்பு இருந்தால் மட்டுமே சுவாரசியம் தரக்கூடியவை குறும்படங்கள். சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் தான் மேலே நீங்கள் பார்ப்பது. வசனம் எதுவுமே இல்லை,ஆனால் காட்சிகளை திட்டமிட்டதும், தொகுத்ததும்தான் இந்த படத்தின் சிறப்பாய் நினைக்கிறேன். குறும் படமெடுக்க ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.

Thursday, May 6, 2010

நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது....

எழுதாமலே இருப்பது கூட சுகமாய்த்தான் இருக்கிறது. மெனெக்கெட்டு எழுதுவதை விட தோன்றும் போது எழுதுவதின் பின்னால் எப்போதும் ஒரு நேர்மை இருக்கும்.

எழுதாவிட்டாலும் கூட மெனக்கெட்டு பதிவுலகின் எல்லா எல்லைகளிலும் வாசிக்கிறேன், வாசித்த பின்னர் ஒரு விதமான அயற்சியே எஞ்சுகிறது.புகழ் வெளிச்சம் எனக்கு அலுத்துவிட்டதால் கூட அப்படி தோன்றலாம்.

தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதும் எழுத்துக்களை அதிக நாட்களுக்கு எழுத முடியாது. சரக்கு தீர்ந்த பின்னால் பொய் சொல்லியோ, மிகையாகவோ எழுதலாம்...ஒரு கட்டத்தில் இந்த மாதிரி எழுத்தும் களைப்பையே தரும். சொந்த அனுபவம்....ம்ம்ம்ம்ம்

மயங்கும் கண்ணை பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே.....

இப்போது கேட்டுக் கொண்டிருக்கும் வரிகள் இவை.....நானே வருவேன் என்கிற அமரத்துவம் வாய்ந்த பாடலின் வரிகள்....நாயகியின் சோகம் காதலிக்காதவனையும் காதலிக்க வைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் Jack Nicholson நடித்த Something's Gotta Give படத்தினை பார்த்தேன், எத்தனையாவது முறையாக பார்க்கிறேன் என்று நினைவில்லை, ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாய் தெரியும் படம் இது....விமர்சனமெல்லாம் எழுதி உங்களை கலவரப் படுத்தப் போவதில்லை.

கொஞ்சம் விவகாரமான கதை, அறுபத்தி மூன்று வயது ’ப்ளேபாய்’ ஜேக் நிக்கல்சன் தனது 20 வயது காதலியின் அம்மாவை எக்குத் தப்பான ஒரு சூழ்நிலையில் சந்திக்கிறார், சில பல தொடர் நிகழ்வுகளில் காதலியின் அம்மாவை கவர்கிறார். இந்த காதலுக்கு குறுக்கே கொஞ்ச வயசு டாக்டர் ஒருவர் வேறு வருகிறார். இந்த காதல் என்ன ஆனது என்பதை கலந்து கட்டி சுவாரசியமாய் சொல்லியிருக்கின்றனர். முடிந்தால் பார்த்து விடுங்கள்.....

காதல் என்பது கத்தி மேல் நடப்பது மாதிரியானது, தவறான ஒரு தப்படி கூட எல்லா சந்தோஷங்களையும் சாப்பிட்டு விடும். இதைப் பற்றி தனியாய் நீளமாய் ஒரு பதிவு எழுத வேண்டுமென ஐந்தாறு வருடஙக்ளாய் நினைத்து மட்டும் கொண்டிருக்கிறேன்.

இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை என தீர்மானமாய் இருந்தேன், ஆனால் சமீபத்தில் பிரபாகரனின் மூத்த சகோதரரின் பேட்டியினை படித்த பின்னர் தோன்றியது இதுதான்..... குழப்பமான ஐம்பதுகளில் இருக்கும் ஒரு மனிதனின் வாக்குமூலம் மாதிரித்தான் இருந்தது.கடவுளை நம்புகிறார், தம்பியை நேதாஜிக்கு இனையாக அடிக்கடி சொல்லியிருக்கிறார். அலைக்கழிக்கப் படும் தனது தாயாரைக் குறித்த துடிப்பு எதையும் கானோம்.ம்ம்ம்ம்ம்ம்

இத்தனை தூரம் எழுதிய பின்னர் என்ன தலைப்பு வைப்பது என புரியவில்லை. எதற்கும் “நேற்றிரவு கடவுளிடம் பேசிக் கொண்டிருந்த போது” என வைத்து விடுகிறேன்.

எனது மரியாதைக்குறிய தோழியும், எனது அருமை தெலுங்கு வாத்தியாருமான(நாளை பின்னே இதைப் படிச்சா சந்தோஷப் படுவார் :)) அந்த பதிவர் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். நான் தெலுங்கு படித்த கதையினை அவர் விரைவில் நலம் பெற்று வந்து பதிவாய் இடவேண்டுமென எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக்காதனை வேண்டுகிறேன்.



Friday, April 16, 2010

......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



என் பால்யத்தின் நினைவில் உறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று. சில நிகழ்வுகள் எத்தனை காலமானாலும் சூடாய்,சுகமாய் நினைத்த மாத்திரத்தில் நம்மைச் சாய்த்துவிடும். அப்படியான தருணங்களில் ஒன்றுதான் குர்பானி, அப்பாவின் கையைப் பிடித்துகொண்டு போய் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

விளக்குகள் ஜொலிக்க திரை உயர்வதும், வெதுவெதுப்பான இறுக்கத்தில் பாப்கார்ன் நெடி சூழ்ந்த இருட்டில் திரையில் மிளிர்ந்த காட்சிகளை அம்மாவின் புடவை தலைப்பை இழுத்து தலையில் போர்த்திக் கொண்டு பார்த்ததெல்லாம் நேற்றுத்தான் நடந்தது போலிருக்கிறது.

அவ்வப்போதைய, இத்தகைய நினைவுகள்தான் நான் இன்னமும் தொலைந்து போகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது....உணர்த்திக் கொண்டிருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம்

Saturday, April 10, 2010

சித்தர்களும், ரகசியங்களும், சில எரிச்சல்களும்

நிறைய கோபத்துடன் எழுதத் துவங்கிய பதிவு இது....

சமீப நாட்களாய் சித்தர்கள் பற்றிய பதிவொன்றை தொடர்ந்து படித்து வருகிறேன். அரிய பல தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப் படுதல் மிக அவசியம்.அவருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இனி நம் கதைக்கு வருவோம் !

சித்தர்கள், தங்களின் அனுபவ குறிப்புகளை பாடல்களாய் எழுதி வைத்திருக்கின்றனர். அவர்களின் சீடர்களின் வாயிலாக வழி வழியாய் கொண்டு வந்து சேர்க்கப் பட்டதுதான், தற்போது நமக்கு கிடைத்திருக்கும் பாடல்கள். இந்த பாடல்களின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்கள் எனக்கு நிறையவே உண்டு.

தங்களின் கண்டுபிடிப்புகளின் ரகசியம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான சித்தர்களின் பிரதான முன் தீர்மானமாய் இருந்திருக்கிறது. இதன் பொருட்டே பெரும்பாலான சித்தர்களின் பாடல்கள் எளிதில் பொருள் அறிய இயலாத மறைமொழியில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது நேரடி பொருள் தரும் வகையில் அருளப் பட்ட பாடல்கள், காலப் போக்கில் அவரது சீடர்களினால் மறை மொழியாக திரிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

இன்றைக்கும் கூட இந்த பாடல்களின் மறைபொருளை பிரித்தறியும் வல்லமை உடையவர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட உண்மைப் பொருளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர். இதை மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒரு கூறாகவே கருதுகிறேன்.

குருவின் உத்தரவு இல்லாமல் இவற்றை எவருக்கும் சொல்லக் கூடாது, தகுந்த குருவின் மேற்பார்வையில்லாமல் இவற்றை செய்தால் பலிக்காது என்றெல்லாம் கூறி, பாடல்களின் ரகசியம் காக்கப் படுதல் என்பதன் பின்னனியில் இவர்களின் குறுகிய சுயநலத் தன்மையே மேலோங்கி இருப்பதாக சந்தேகங்கள் எனக்கு உண்டு.

இன்றைக்கு மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி உலகெங்கும் கோலேச்சுகிறது. இத்தனை அபரிமிதமான வளர்ச்சிக்கு உண்மையான காரணம் அதன் நுட்பங்களும், அறிவியலும் பொதுவில் வைக்கப் பட்டதும், விவாதிக்கப் பட்டதுமே....ஆர்வம் உள்ளோரின் பங்களிப்புகள் ஏற்றுக் கொள்ளாப் பட்டதன் மூலமாக தொடர்ச்சியான புதிய மேம்படுத்தப் பட்ட உத்திகளை பயன் பாட்டிற்கு கொண்டு வந்திருப்பதால்தான் இன்றைக்கு அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், காலம் காலமாக நமது சித்தவைத்திய சிகாமனிகள், வெறும் வாய்ச்சவடால்தான் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களிடம் எல்லா நோய்களுக்கும் தீர்வு இருக்கிறது...ஆனால் அதைச் சொல்ல உத்தரவில்லை, வெங்காயமில்லை என்பது மாதிரியான எரிச்சல் தரும் வியாக்கியானங்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வழியாய் இந்திய அரசு இப்போது தீவிரமாய் சித்த மருத்துவ நுட்பஙக்ளை ஆராய ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி. நமது அரசுக்கு எந்த சித்தர் உத்தரவு கொடுத்தார் என தெரியவில்லை.

சித்தர்களின் குறிப்புகள் எழுதப் பட்ட காலகட்டத்தில் இவற்றின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என நினைத்திருக்க தேவையான சமூக காரணங்கள் இருந்திருக்கலாம். இன்றைக்கு மாறிவிட்ட காலச் சூழலில் அவர்களின் நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அவசர யுகத்தின் மனிதனுக்குப் பயன் படுமாயின் அதை பொதுவில் கொண்டு வருவதில் தப்பேதுமில்லை.

நான் உணர்ந்த வரையில் சித்தர்களின் அவதானிப்பில் மனித உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இவற்றை வாதம், பித்தம், கபம் என்கிற மூன்று தாதுக்களும், ஐந்து வாயுக்களும் நிலை நிறுத்துகின்றன. இவற்றின் சம நிலை பாதிக்காத வரையில் மனித உடலுக்கு ஊறு விளைவதில்லை. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் உண்டானால் ஏற்படும் சிரமங்களுக்கான தீர்வே சித்த மருத்துவம்.

காயகற்பம் என்பது மேற்சொன்ன சமநிலையினை பராமரித்து உடலை வலுவாக்கும் அல்லது வலுவாய் வைத்திருக்கும் சித்த வைத்திய தயாரிப்புகள். இத்தனை எளிதான அடிப்படையின் மீது கட்டமைக்கப் பட்ட மருத்துவ முறையினை இன்னமும் ரகசியம், வெங்காயம் என்கிற பெயரில் சக மனிதனுக்கு கிடைக்காமல் மறைத்து வைப்பது ஈனத்தனமான செயலாகவே கருதுகிறேன்.

இன்னமும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது.....சில காயகற்ப முறைகளை எதிர்வரும் பதிவுகளின் வாயிலாக விவாதிக்கலாமா என நினைக்கிறேன். நான் அறிந்தவைகளை பொதுவில் வைத்து விவாதித்து அதன் சூட்சுமத்தினை அனைவரும் பகிர்ந்து கொள்வது அந்த பதிவுகளின் நோக்கமாய் இருக்கும்.

எனக்கு குறிப்பிட்ட யார் மீதும் பகையில்லை, அவர்களின் பொதுவான மனப்போக்கின் மீதான கோபம் மட்டுமே...

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி.....இனி வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.






Thursday, April 1, 2010

சாருவை வாரும் ஜெமோ!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவை எல்லாரும் நய்யப்புடைத்து களைத்திருக்கும் வேளையில், அவரின் ஆதர்ச எதிரியான எழுத்தாளர் ஜெயமோகன் ஏப்ரல் ஒன்னாம் தின சாக்கில், தனது வலைத் தள கட்டுரையில் சாருவை புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.

பாவம், எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத/உறைக்காத மாதிரியே சாரு நடிக்கப் போகிறாரோ!

இனைப்பு கீழே...

http://www.jeyamohan.in/?p=6954

Wednesday, March 31, 2010

மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காகவே பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....

என்னை ஒரு முட்டாளாக என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை யாகவும் உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்கவும் முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

பங்காளிகளுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

(புதிதாய் யோசித்து எழுத சோம்பேறித்தனமாய் இருந்ததால், இது ஒரு மீள் பதிவு!)

Wednesday, March 17, 2010

கடன் தொல்லை தீர ஒரு அரிய்ய்ய்ய்ய்ய வாய்ப்பு ?

இதெல்லாம் சாத்தியமா?, நண்பர் திரு.செந்தில் கொடுத்துதவிய அரிய தகவல், யாருக்கேனும் இதனால் கடன் தீர்ந்தால், மேற்படி நண்பருக்கு உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கலாம்.

இனி மேட்டர் கீழே.....


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.

இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.

2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை
இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை

இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.

வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

இதைப் பற்றி நம்ம சித்தூர். முருகேசன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம் என இருக்கிறேன்.

Tuesday, March 16, 2010

சவுக்குக்கு ஒரு சவுக்கு !

பதிவுகள் தர்ற சுதந்திர உற்சாகத்துல தமிழ் பதிவுலகில் நாளாந்தம் கருத்து வெந்த சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொல்லி வைத்தாற் போல இவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற இருபத்தி நாலு கேரட் சொக்க கொள்கைவாதிகள். மயிர் நீத்தால் உயிர் நீக்கும் தன்மானத்தவர்கள்.ஆரம்பத்தில் இவர்களின் கொனஷ்ட்டைகள் எரிச்சலாய் இருந்தாலும் நாளடைவில் காமெடி பீஸாய் கருதி கடந்து போய் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு ஒரு திரட்டியில் சவுக்கு என்பாரின் ஒரு பதிவினை காணக் கிடைத்தது. பதிவின் தலைப்பு ”கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே…”.

அடங்கொய்யால! வாசகர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று அவரின் பதிவில் ஊடுருவினேன்.காவல்துறை மூன்று போராட்டங்களுக்கு அனுமதி தரவில்லையாம், கருணாநிதி பிரியாணி பொட்டலம் தந்தாராம்.ஹிண்டு ராம் ஹிந்தி பாட்டு போடறதா சொன்னாராம்.அதுக்கு, ஹிந்தி பாட்டுக்கு மட்டும், நாட்டுக்கு வேணாம்னு கருணாநிதி சொன்னாராம். அப்புறம் கருணாநிதியை வசைமாறி பொழிந்து முடித்திருக்கிறார் இந்த கொள்கைத் தங்கம்.

காவல்துறை அனுமதி மறுத்தா தடையை மீறின்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் குடுத்து படங்காட்டுவாங்களே...அதெல்லாம் இவருக்கு தெரியாது போல. . . ..

கருணாநிதியை வசைபாடும் இவர்கள் கண்ணுக்கு செயலலிதா என்றைக்குமே தெரியமாட்டார், இது இம்மாதிரியான ஆசாமிகளிடம் காணக்கிடைக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை. அந்த அம்மாவை ”ஈழத்தாய்” ன்னு சொல்லி தனியா சந்தோசப் படுவாகளோ என்னவோ. ஆனால் கொழுத்த திராவிட குஞ்சுகளாய் காட்டிக் கொள்ள பார்ப்பனீயம் வெங்காயம்னு வசதியா பேசீருவாங்க....

தமிழக மக்கள் உரிமை கழகம் என தன் பதிவுக்கு பெயர் வைத்திருக்கிறார். தமிழர் உரிமைக்காக இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என பதிவு முழுவதையும் மேய்ந்தால் அதில் பெரும்பாலும் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் பதிவுகள்தான் . அ.இ.அ.தி.மு.க வின் தீவிர விசுவாசியாக இருப்பாரோ என்கிற சந்தேகமே வந்து விட்டது எனக்கு....அம்மா மட்டும் இந்த பதிவினை பார்த்தால் சவுக்குக்கு பட்டு குஞ்சலம் கட்டினாலும் கட்டுவார்.....அத்தனை காட்டமாக கருணாநிதியை விமர்சித்திருக்கிறார்.

பதிவின் மேலே பிரபாகரனின் படம் வேறு. . . . ஈழத்தமிழ் பதிவர்களை குறிவைத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பதிவின் தலைப்பை தமிழர் உரிமை கழகம் என்றாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் எல்லா பதிவுகளிலும் கருணாநிதியை திட்ட முடியாதே என்பதற்காக தமிழகத்தை சேர்த்திருப்பார் போலும்.

தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?, அந்த கோவத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!. . . . அப்புறம் வரும் போது அவர் பதிவில் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன். அதில் ஒன்றை அவர் வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை....எனவே அந்த பின்னூட்டம் கீழே!

தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க....

அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு...அவருதான்யா சிங்கம்....யோசிங்க பாஸ்!

சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

Wednesday, March 3, 2010

சாருவுக்கு ஒரு வார்த்தை!

பரவசத்தில் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு ஆடவும் வேண்டாம்...

பின்னர் எதை பொத்துவது என தெரியாமல் அல்லல் படவும் வேண்டாம்....

Tuesday, March 2, 2010

நித்யானந்தருக்கு நன்றி...

நான் நித்யானந்தரின் செயல் பாடுகளை விமர்சன பதிவாக, ”ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்” எழுத ஆரம்பித்து தொடர இருந்த சூழ்நிலையில் இன்றைக்கு சன் டிவியின் புண்ணியத்தால் பெரிதான ஆச்சர்யங்கள் ஏதுமில்லாமல் இத்தனை சீக்கிரத்தில் அவரின் ஆன்மீக வியாபாரம் முடிவுக்கு வந்ததை எண்ணி பரிதாபமே மிஞ்சுகிறது.

மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப் பட்டிருக்கும் அந்த வீடியோவில், நித்யானந்தர் என்கிற ராஜசேகரனுக்குள் இருக்கும் காதலும், காமமும் கடை விரிக்கப் பட்டிருக்கிறது.”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கிற கவியரசரின் அனுபவ ஞானத்தின் வீர்யத்தை இனிவரும் நாட்களில் இவரின் விசயத்தில் நாம் காணப்போகிறோம்.

நேற்றுவரை அவரை ஆராதித்தவர்கள் இனிமேல், ”நான் அன்னிக்கே சொன்னேன்”...என்று தங்களை காத்துக் கொள்ளும் நாடகங்களும் அரங்கேறும். இனி வரிசையாய் சில பெண்கள் என்னை கெடுத்தார் என கிளம்பி வரலாம்.தொழில்(!) போட்டியால் எதிர்வரிசை சாமியார்கள் பண்ணிய செட்டப் என நித்யானந்த கோஷ்டியினர் சோக நாடகம் போடலாம்.

எது எப்படியோ, முற்றும் துறந்தவர் என்றும் எல்லாம் கடந்தவர் என்றும் தன்னைச் சுற்றி நிர்மானித்து வைத்திருந்த பிம்பம் உடைந்து சிதறியதை அந்த இளைஞர் வரும் நாட்களில் எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதே என்னுடைய ஆர்வமான எதிர்பார்ப்பு. CRISIS MANAGEMENT என்பது மிகச் சிரமமான ஒரு கலை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி தலைப்புக்கு வருவோம்.....

இனி வரும் நாட்களில், அவரின் இத்தனை நாளைய ஆன்மீகமும், போதனைகளும் மறந்து போய் ஒரு கீழ்த்தரமான மனிதராய் இந்த சமூகத்தால் பார்க்கப் படுவார், பரிகசிக்கப் படுவார். பொய்யான பிம்பங்களை கட்டமைப்பதில் உள்ள ஆபத்து இதுதான். எல்லாம் மாயை எனச் சொல்லும் இவர்கள் புகழுக்கும், பணத்துக்குமாய் கடவுள் வேஷம் கட்ட தயங்காதவர்கள் என்பது முரண் நகை.

இயல்பாய் இருத்தல் என்பது விலங்குகளில் மட்டுமே சாத்தியம். மனிதன் உடையனியத் துவங்கிய போதே இயல்பு விலகிவிட்டது.வேஷங்கள் என்பது இல்லாமல் மனிதம் இல்லையென்றாலும், மிகை வேஷங்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரையிலான வாழ்க்கையில் எனது பலம்,பலவீனங்களை பெரிதாய் மறைத்ததில்லை,இயல்பானவனாகவே இருந்திருக்கிறேன், அல்லது என்னை மற்றவர்களைக் காட்டிலுமான மிகை மனிதனாய் நிர்மானித்துக் கொள்ளும் முனைப்பும் இருந்ததில்லை.பொய்யான பாவனைகளினால் பிம்பங்களை கட்டமைக்காமல் போனதினால் சமயங்களில் எனக்கு பாதகமும் நேர்ந்திருக்கிறது.

அவ்வப்போது இது குறித்த கவலைகள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் இப்போது இதை எழுதும் சமயத்தில் இதுவரையிலான எனது நிலைப்பாடுகள் குறித்த பெருமிதமே ஓங்கியிருக்கிறது. இதற்காகவேனும் அந்த இளைஞருக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்......

Wednesday, February 24, 2010

வாழ்த்த வயதுதான் வேண்டுமா ?

நேற்றைக்கு இங்கே திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவை வாழ்த்தி மண்ணிக்கவும் வணங்கி போஸ்ட்டர்கள், ப்ளக்ஸ். எல்லாம் அம்மாவுக்கு அறுபத்தி இரண்டு வயதான கொண்டாட்டம்தான்.அம்மாவை போற்றிய அதியற்புதமான ஆராதனைகள் மற்றும் ஸ்தோத்திரங்களுடன் கீழே, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம் என சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் போட்டிருந்தனர்.

இந்த எதுகை மோனை வாசகத்தை எந்த புண்ணியவான் உருவாக்கினாரோ தெரியவில்லை. ஈயடிச்சான் காப்பியாக அத்தனை பேரும் பயன்படுத்துகிறார்கள்.உண்மையில் ஒருவரை வாழ்த்த என்ன தகுதி வேண்டும் நெகிழ்ந்த மனதுதானே வேண்டும். வயதுக்கும், வாழ்த்துக்கும் எதேனும் தொடர்பு இருக்கிறதா.

ஒருவரை தினம்தோறும், எவரும் வாழ்த்திக் கொண்டே இருக்கப் போவதில்லை, அல்லது தினமும் அதற்கான காரண காரியங்களுக்கும் வாய்ப்பில்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு நாளில் வாழ்த்த வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட இவர்கள் வணங்குவதாய் போஸ்ட்டர் அடிப்பதன் மூலம், அன்றைக்கு மட்டும்தான் வணங்குவார்கள் மற்ற நாட்களில் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பது மாதிரியான கள்ளத்தனம் வந்து விடுகிறதல்லவா!

புத்தாண்டு மாதிரியான கொண்டாட்ட காலங்களில், வயதைப் பார்த்தா ஒவ்வொருவரும் வாழ்த்தும், வணக்கமும் சொல்லுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் காக்காய் மற்றும் காலில் விழும் கலாச்சாரத்தில் அவமானகரமான எச்சமாகவே எனக்கு இந்த வாசகம் தோன்றுகிறது.

”அம்மா”விற்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, February 23, 2010

ரொம்ப நாளாய் தேடிய பாடல்...!



சமீபத்தில் வெளியான 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் வரும் ஒரு முதலிரவு காட்சியில் பிண்ணனியில் ஒலித்த பாடல் இது. கேட்ட மாத்திரத்தில் ரசிகனாய் போனேன். இனையம் முழுதும் தேடிக் களைத்தும் கிடைக்காத இந்த பாடல் சற்று முன்னர் தானாய் வந்து சிக்க....ஒரே இன்ப அதிர்ச்சி!

மச்சமே உடம்பாய் பிறந்தவர் தலைவர்தான்! கொடுத்து வச்ச மகராசன், ராதா சலூசாவை ஒரு வழியாக்கி விடுகிறார். ம்ம்ம்ம்...நமக்கு அது முக்கியம் இல்லை....பாடல் வரிகளை கவனியுங்கள் எத்தனை எளிமையான வார்த்தைகள், வருடும் மெட்டமைப்பு....

ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அனைத்த படி
தேன் அள்ளி பூமுத்தம் தெளித்த படி
எனை தழுவட்டுமே தினம் இந்த பருவக் கொடி!

இதுதான் ரொமான்ஸ்...

கேட்டு மகிழுங்கள்....பார்த்தால் வயிற்றெரிச்சல் வரும்!

கேட்டதில் பிடித்தது....!



கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்

கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்

கொண்டவுடன் பிரிவை சொல்லி வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் வாழ்ந்தென்ன லாபம்!

Sunday, February 21, 2010

ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்

கடந்த வார இறுதியின் அனுபவம்/அவஸ்தையை பற்றி கொஞ்சம் பிரஸ்தாபிக்கலாம் என்று இந்த பதிவு !

எனது நினைவாற்றல் குறித்தான கவலை அவ்வப்போது வருவதுண்டு.எதைக் கொட்டினாலும் தங்குவதில்லை, 'நிறைகுடம்' நானென பெருமையடித்துக் கொள்ளலாம். சமீபத்தில் சாரு நிவேதிதாவின் பதிவில் ஸ்ரீ நித்யானந்தரின் அதீத நினைவாற்றல் பயிற்சி என ஒரு விளம்பர பதிவிட்டிருந்தார்.

சமீப நாட்களில் சாருவின் பதிவுகளில் இம்மாதிரியான நித்யா புராணம் படித்து கிளர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.நித்யானந்தரின் பல யூட்யூப் க்ளிப்பிங்குகள் வேறு, இந்த ஆளிடம் ஏதோ சரக்கு இருக்கிறது என எண்ண வைத்திருந்தன.

நித்யானந்தரை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பு அத்தோடு, நான் அதீத நினைவாற்றல் பெற்றவனாகி விடும் சாத்தியம் வேறு கைகூடி வருகிறது! என்னே ஒரு பாக்கியம்! தொலை பேசினேன்.....

நித்யானந்தம்! , யார் மூலமா தெரிஞ்சிகிட்டீங்க?

எழுத்தாளர் சாரு நிவேதிதாவோட சைட்ல போட்ருந்தாரு !

அவசியம் வாங்க, வரும் போது உங்களுக்கு தெரிஞ்சவங்களையும் கூட்டீட்டு வாங்க!

நித்யானந்தர் க்ளாஸ் எடுப்பாரா? ஃபீஸ் எவ்வளவு ஆகும்?

மஹராஜ்தான் க்ளாஸ் எடுப்பார், எழுநூற்றி அய்ம்பது ஆகும்.

ம்ம்ம்ம்....எத்தனை மணிக்கு அங்க இருக்கனும்?

காலை எட்டு மணிக்கெல்லாம் வந்துருங்க, ஆன் த ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன்.பதின்மூன்று வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்தான் அனுமதி.

ரொம்ப தேங்க்ஸ்ங்க, வந்துர்றேன்....

நித்யானந்தம்....


சனிக்கிழமை காலை எட்டு மணி, என்னுடைய நினைவாற்றலை பல மடங்கு அதிகரிக்கும் பேராசையில், வீட்டில் அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாத கர்ம வீரனாய் ஹோட்டல் காஞ்சியில் காலடி வைத்தேன். வலது புறம் இருந்த கல்யாண மஹால் போன்றதொரு பகுதியில், எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் நித்யானந்த சபைகள் ஃப்ளெக்ஸ் மூலமாய் வரவேற்றனர்.

சிவந்த மேனியராய், வெள்ளுடையில் ஆண்களும், பெண்களும் ...... வாலண்டியர்களாம்!, ஒரு விண்ணப்பதைக் கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள், கர்ம சிரத்தையாய் செய்தேன். என் பெயரை நித்யானந்தர் மாற்றிட விருப்பமா என்று கேட்டிருந்தனர். சற்றே யோசித்தேன்! ,ஏதாவது ஒரு பாடாவதி பெயரை அவர் வைக்கப் போய், அந்த ராசியில் நான் அடுத்த அவதார புருஷனாகி விட்டால்....நினைக்கவே பீதியாக இருந்தது.

என்னோடு விண்ணப்பம் பூர்த்தி செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், 'அவா' வாகவே இருந்தனர். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் அவர்களின் விழிப்புணர்வு குறித்து பொறாமையாகவே இருந்தது. ஸ்பீக்கரில் நித்யானந்தரை வானுக்கும், மண்ணுக்குமாய், ஆண்டவரே!..தாண்டவரே! என நாட்டுப் புற மெட்டுக்களில் போட்டு தாக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்தவர்களின் ‘நேக்கு','நோக்கு' சம்பாஷைனகளில் எரிச்சலாகி எத்தனை மணிக்குத்தான் துவங்குவீர்கள் என கேட்டேன். பத்து மணிக்கு என ஈவிரக்கமில்லாமல் சொன்னார்கள். எட்டு மணிக்கே எதுக்கு வர சொன்னீங்க என்கிற என் கேள்விக்கு , எட்டு மணியில் இருந்து ரிஜிஸ்ட்ரேசன்னு சொல்லீருப்பாங்க என அசராமல் பதில் வந்தது. என் நினைவாற்றலின் மீதிருந்த நம்பிக்கையினால், அவர்களின் பதில் கோவத்தை தரவில்லை, எரிச்சல் தான் மண்டியது.

இந்த இடத்தில் ஹோட்டல் காஞ்சியை பற்றி சில வார்த்தைகள் ....... நகரின் இதயப் பகுதியில், கால ஒட்டத்தின் கவனிப்பு போதாமல் அழுக்காய் இருக்கும் மூன்று நட்சத்திர(!) ஹோட்டல். பணியாளர்களுக்கு கலர்கலராய் சீருடைகள் ,ஆனால் வருடத்திற்கு ஒரு முறைதான் வாஷிங் அலவன்ஸ் தருவார்கள் போலிருக்கிறது.

அழுது வடிகிறது ரெஸ்ட்டாரண்ட்...... பொங்கல்,வடை கேட்டேன்!, காபி குடிக்கும் சாசரில் பொங்கலை வைத்து அதன் தலையில் ஒரு ஸ்பூன் குத்தி, வடை ஓரத்தில் தொற்றிக் கொண்டு வந்தது. சரி சாப்பிட தட்டு தருவார்கள் என காத்திருந்தேன்.... காத்திருதேன்...., பொறுமையிழந்து ஒரு தட்டு கொடுக்கச் சொல்லி கேட்டால் சர்வர் நான் ஜோக்கடிப்பதாய் நினைத்து சிரித்துக் கொண்டே, இங்க இப்படித்தான் தர்றது என அலட்சியமாய் சொல்ல.....கடுப்பேறியது. அந்த அதிகாலை நேரத்தில் எனக்குள் இருந்த மிருகம் தூங்கிக் கொண்டிருந்த படியால் அவர் தப்பினார். காஃபி நன்றாக இருந்தது. அறுபத்தி ஐந்து ரூபாய் மொய்ய்ய்ய்ய்...

ஒரு வழியாய் கல்யாண மஹாலில் நுழைந்தேன்.....வாசலில் குறிப்பெடுக்க ஒரு நோட்டும், பேனாவும் கூடவே ஒரு முழ நீளத்தில் ஒரு துணியும் கொடுத்தார்கள். எதற்கென்று புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் கோவனமும் அது தொடர்ச்சியான எண்ணங்களும் கிலியேற்படுத்த ஆனது ஆகட்டும் என உள்ளே நுழைந்தேன்.


மேடையில் ஒரு சிம்மசனம் போட்டிருந்தார்கள். அதில் நித்யானந்தரின் பெரிய படம் வைத்திருந்தார்கள். அதற்கு கீழே காவித் துணி போர்த்திய இன்னொரு சிம்மாசனம். லேசாக பொறி தட்டியது, மஹராஜ்தான் நடத்துவார்னு சொன்னாங்களே....அப்ப நித்யானந்தர் மஹராஜ் இல்லையா?

தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......


கேட்டதில் பிடித்தது.....

நான் கவிஞன் இல்லை...

ஆனால் !

Tuesday, February 16, 2010

சென்னையின் மொழி !

ஏன் இப்படியான பதிவினை எழுத நேரிட்டது?

பின் கதை கொஞ்சம்.....

கடந்த பதிவின் பின்னூட்டத்தில், சகபதிவர் ஒருவர் 'டவுசர் பாண்டி' என்கிற பெயரில் பதிவெழுதுவதாய் தெரிய வந்தது. இத்தனை நாளாய் அவர் என் கண்களிலோ, அல்லது நான் அவர் பார்வையிலோ வராமல் போனது தற்செயலானது என்றே நம்புவோம்.என்னுடைய பதிவின் முகவரி கூட http://tavusarpandi.blogspot.com .தான் மட்டுமே டவுசர் என நினைத்திருந்தவர் ரொம்பவும் கவலையாகி விட்டார். அவருக்கு நிம்மதி தரும் வார்த்தைகளை பின்னூட்டத்திலும் பின்னர் அவரின் பதிவிலும் சொல்லி விட்டேன்.

அவரின் பதிவினை மேய்ந்த போதுதான், இப்படியான ஒரு பதிவினை எழுதிட தீர்மானித்தேன். எனது பதினாலு வருட சென்னை வாழ்க்கையின் அனுபவத்தை முன் வைத்து சென்னையின் மொழியின் ஊடான எனது பயணத்தையும், பார்வைகளையும் பதிந்து வைப்பது அவசியமென படுகிறது. மற்றபடி யாரையும் விமர்சிக்கும் நோக்கமில்லை.

பொதுவில் சென்னையின் மொழி என்றவுடன் அடையாளம் காட்டப் படுவது, அல்லது நமது நினைவடுக்குகளில் பதிய வைக்கப் பட்டிருப்பது, மனோரமாவும், தேங்காய் சீனிவாசனும், லூஸ் மோகனும் பேசிய மிகைப் படுத்திய நாடகத் தமிழ்தான். நிதர்சனத்தில் அத்தனை கேவலமாய் இங்கே யாரும் மொழியாடுவதில்லை. மேட்டுக்குடி வசனகர்த்தாக்கள் தனக்கும் கீழ் நிலை மனிதன் மீது திணித்த ஒரு அடையாளம்தான் மெட்ராஸ் பாஷை.

உண்மையில் சென்னைத் தமிழ் என்பது மூன்று அடுக்குகளால் ஆனது. சென்னையின் மேல்தட்டு வர்க்கம் இந்தியா முழுமையாக இருந்து வந்த குடியேறிகளினால் உருவானது. பெரும் செல்வந்தர்களும், தொழில் முனைவோரும் இதில் அடங்குவர். என் அனுபவத்தில் சென்னையின் பூர்வகுடிகள் யாரும் இந்த மேல்தட்டில் இருப்பதாய் தெரியவில்லை. தொழில் மற்றும் இங்கிருக்கும் வசதி வாய்ப்புகளை மட்டுமே முன்வைத்தும் குடியேறியவர்கள் இவர்கள்.

இவர்கள் தங்களின் பணியாட்கள் அல்லது பொருளாதாரத்தில் கீழே இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள மட்டுமே தமிழை உபயோகிக்கிறவர்கள் . இது பிழைப்புவாதம் மற்றும் அதிகாரவர்க்கத்தின் அலட்சிய தமிழாகவே இருக்கிறது. தமிழை மென்று தின்னும் புண்ணியவான்கள்.அண்டை மாநிலத்தவர்கள் இம்மாதிரி தமிழை கையாளுவதைக் கூட ஒருவகையில் நியாயப் படுத்தி விடமுடியும். ஆனால் பிறப்பால் தமிழர்களானவர்களே தாய்மொழிக்கான இழிவை தரத் தயங்குவதில்லை. இவர்களின் தற்போதைய தலை முறையினருக்கு தமிழை வாசிக்க கூட தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

இரண்டாம் அடுக்கில் இருப்பவர்கள், நடுத்தர வர்க்கம் எனப்படும் வேலைக்குச் சென்று பொருளீட்டுபவர்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் இருந்து குடியேறியவர்கள். இவர்கள்தான் சென்னையின் மொழியில் பிரதான பங்கு வகிப்பவர்கள். கலைத் துறை, அரசியல்,அரசாங்க பணி, தனியார் நிறுவன பணிகள் என எங்கும் வியாபித்திருப்பவர்கள். தங்கள் வேரின் மொழியினை சென்னையின் தமிழோடு கலக்க விடாத பிடிவாதத்துடன் இருப்பவர்கள். மதுரையோ, திருநெல்வேலியோ,கொங்குதமிழோ.....அதன் இயல்பும் அழகும் மாறாமல் தமிழாடுபவர்கள் இவர்களே.

மூன்றாம் அடுக்கில் இருப்பவர்களின் மொழிதான் சென்னையின் மொழியாய் அடையாளம் காட்டப் படுகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் சிறுபான்மையினர். வடசென்னை பகுதியில்தான் இம்மதிரியான மொழிநடை பயன்பாட்டில் இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மீனவர்கள், தொழிளாளர்கள்,ஆட்டோ மற்றும் ரிக்‌ஷா ஓட்டுனர்கள், அன்றாட தினக்கூலி செய்வோர் என எளிதில் இவர்களை வகைப் படுத்திடலாம்.

முறையான கல்வியோ, அல்லது மொழி அறிவோ கிடைத்திட வாய்ப்பற்ற ஒரு பாமரனின் முயற்சியாகவே இந்த பேச்சுத் தமிழைச் சொல்லுவேன். எந்த விதமான வரையறைகளோ, நிர்பந்தங்களோ இல்லாது ஒருவரின் கற்பனை மற்றும் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ளும் லாகவம் இதில் இருக்கிறது. ஓரம் கத்தரிக்கப் பட்ட ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வார்த்தைகளின் கலவையான மொழி. அலங்காரமோ, தொடர்பு வார்த்தைகளோ இல்லாத காரியவாதியின் மொழிநடை இது.

பதிவின் நீளம் கருதி வரும் நாட்களில் இதை தொடராய் தொடர்கிறேன்....

Saturday, February 13, 2010

பதின்ம வயதின் படிமங்கள்....!

பிரபல பதிவரும், நண்பருமான ஜீவன் அவர்கள், பதின்ம நினைவுகளை பகிர அழைத்திருக்கும் ஒரே ஆண் பதிவர் நான் மட்டுமே என்கிற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவே இந்த உடனடி பதிவு.....ஹா...ஹா...ஹா...

பாசாங்குகள் இல்லாத எனது பதின்ம வயதுகள் மூன்று பகுதியாய், தொடர்பே இல்லாத கொண்டாட்டங்களின் காலம்.

ஆறில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான கூட்டுப்புழு காலம்...

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்கிற இருதலை கொள்ளி காலம்....

கல்லூரியின் காட்டாற்று காலம்.....

ஆறாம் வகுப்பு ....முதல் நாள் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்த போது, என்னைக் கடந்து ஓடிய ஒருத்தன் , ”நம்ம க்ளாசுக்கு புதுசா ஒருத்தன் வர்றாண்டா” என கூச்சலாய் கட்டியங் கூறியதை, பதின்ம வயதுக்குள் எனது நுழைவின் குறியீடாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்..

ஆகக் கடுமையான ஒழுங்குகளை திணிக்கும் அம்மா, அத்தனை எளிதில் நெருங்க முடியாத பரபரப்பில் அப்பா....ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போகும் விசாரனை கைதிகள் மாதிரி தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் வேலையாட்கள். அத்தனை சுவாரசியமானதாக இருக்கவில்லை துவக்க நாட்கள்.ஹிந்தி பண்டிட் ஒருவர் தினமும் வீட்டுக்கு வந்து எங்களுக்கு ப்ராத்மிக்கில் இருந்து ஆரம்பித்தார்.நான் விஷாரத்தில் போய் முடித்தேன்.

ஒன்பதாம் வகுப்பிற்கு வந்த போது நிறைய சினிமா ஃபிலிம் ரோல்களை சேகரிக்க ஆரம்பித்திருந்தேன். கருப்பு வெள்ளையில் இருந்து கலர்படம் வரையிலான துண்டு துண்டான பிலிம் ரோல்கள்... அதே மாதிரி சினிமா பாட்டு புத்தகங்கள்.அப்போதைக்கு என்னுடைய நெருக்கமான நண்பன் என்றால் அது இலங்கை வானொலியைச் சொல்லலாம்.கிரிக்கெட் விளையாடவும் வீட்டில் அனுமதி கிடைத்திருந்தது.....

பத்தாம் வகுப்பில்தான் ட்யூசன் ரூபத்தில் பெண்களின் அருகாமை கிடைத்தது.தடிப் பயல்களாய் காலம் கடத்திக் கொண்டிருந்த எங்களுக்கு இதெல்லாம் புதியதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. பெண்கள் எல்லாரும் லட்சணமாய், கலர்கலரான தாவனிகளில் பவுடர் பூச்சு குங்குமத்தோடு, நெஞ்சனைத்த புத்தங்களுடன் வர , நாங்கள் கிரிக்கெட் விளையாடிய கையோடு வேர்க்க விறுவிறுக்க போவோம்.

ஒரு நாள் சுந்தர் சொன்ன பிறகுதான் ட்யூசனுக்கு டவுசர் போட்டுக் கொண்டு போவதன் அபத்தம் பிடிபட்டது. மற்ற பையன்கள் வீட்டுக்குப் போய்,பேண்ட் போட்டுக் கொண்டு ஜம்மென வரும் போது எங்களின் யூனிபார்ம் டவுசர்களினால் நாங்கள் சிறுவர்களாய் பார்க்கப் படுவதாய் நினைக்க ஆரம்பித்தோம் .அப்போதைக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கையாய் இருந்ததால் பெண்களுக்காய் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

அரையாண்டு தேர்வு சமயத்தில் நான் விஷாரத் பூர்வார்த் முடித்து விட்டேன். அந்த வயதில் இது பெரிய விசயம். நான் ஹிந்தி பண்டிட் ஆன விசயம் எப்படியோ ட்யூசன் வாத்தியாருக்குத் தெரிய, ஒரு நாள் அவர் எல்லார் மத்தியிலும் சொல்லி, மேன் ஆஃப் தெ மேட்ச் வாங்குகிற சச்சின் டெண்டுல்கர் மாதிரி கூச்சமாய் வெட்கத்தோடு நின்று கொண்டிருந்தேன். அத்தனை பெண்களும் என்னை ஆச்சர்யத்துடன் பார்ப்பதும், கைதட்டியதும் இனம் தெரியாத மகிழ்ச்சியையும், அதை தக்க வைக்க வேண்டுமென்கிற நினைப்பையும் கொடுத்தது. அநேகமாய் இந்த காலகட்டத்தில்தான் நான் வயதுக்கு வந்திருக்க வேண்டும்.

ப்ளஸொன், முதல் க்ரூப். . . .வேலையாட்கள் இல்லாமல் முதல்முறையாக பஸ்ஸில் பள்ளிக்கு செல்ல அனுமதி கிடைத்தது. இதைக் கொண்டாடத் தெரியாத மக்காகவே இருந்தேன். புதூரில் இருந்து செயிண்ட் மேரீஸுக்கு 2B பேருந்து....வழக்கமாய் மற்றவர்கள் போகும் நேரத்திற்கு முந்தைய காலியான பஸ்ஸின் சன்னலோர பயணமே பிடித்திருந்தது. யாருமில்லாத வகுப்பறையில் புத்தக கட்டை எறிந்து விட்டு, பள்ளியின் வளாகத்துள் இருந்த பிரம்மாண்டமான செயிண்ட் மேரி சர்ச்சில் பாவமண்ணிப்பு கேட்பவர்களை வேடிக்கை பார்ப்பதில் முதல் வருடம் கழிந்தது.

ப்ளஸ் 2 துவக்கம், மறுபடியும் ட்யூசன், காலை ஆறு மணிக்கெல்லாம் போயாக வேண்டும். சைக்கிளில் செல்லவும் அனுமதிக்கப் பட்டேன்.இந்த கட்டத்தில் ராதாகிருஷ்ணன் நெருங்கிய நண்பனான். பெண்கள் விஷயத்தில் நான் கிண்ட்டர் கார்டன் நிலையில் இருந்தேன் என்றால் ராதா இளங்கலை முதலாம் ஆண்டில் இருந்தான்.யாரெல்லாம் லவ் பண்றாங்க, அதை எப்படி கண்டுபிடிப்பது, ஒரு பொண்ணு நின்னா என்ன அர்த்தம், நடந்தா என்ன அர்த்தம் பார்த்தா என்ன அர்த்தம்னு உற்சாகமாய் பாடம் சொல்ல, ட்யூசனை விட இதில் ஆர்வம் பெருகியிருந்தது. இந்த வகையில் ராதாதான் என் முதலும் கடைசியுமான குரு....

ஒரு நாள் ராதா, மாப்ளே! உங்க ஏரியால இருந்து ரெண்டு புள்ளைங்க செயிண்ட் ஜோசப் வர்றாளுங்கடா! யார்னு தெரியுமாடா? என கேட்க ரொம்பவும் அவமானமாய் போய்விட்டது. என் ஏரியாவில் இருந்து வரும் பெண்களை எனக்குத் தெரியவில்லை, கொதித்தெழுந்ததன் பலன் ... அதன் பின்னதான கதைகளை எனது பூர்வாசிரம பதிவுகளில் எழுதியிருப்பதால் தேடிப் பிடித்து படித்துக்கொள்ளுங்கள்.

அம்மாவின் அதிரடியான நெறிபடுத்துதலின் பயனாய், எனக்கு மருத்துவம், பொறியியல், விவசாயம் என மூன்றிலும் இடம் கிடைக்க, அம்மா பொறியியலை தேர்ந்தெடுக்க.., இதன் பிறகு அம்மா என்கிற ராக்கெட்டில் இருந்து பிரிந்த வின்கலமானேன், எனக்கான வட்டப் பாதைகளை நானே தீர்மானிப்பதென தீர்மானித்ததும் இங்கேதான். இதன் பிறகான வாழ்க்கையை பழைய நாட்களுடன் ஒப்பிடுகையில் அம்மாவின் மகத்துவம் இப்போது புரிகிறது.

”ஒரு ப்ரொஃபசனல் கோர்ஸ் போன பிறகு உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணிக்க, உன்னை யார் கேட்க போறா!” இது அம்மா எனக்கு நீட்டிய கேரட். . . .

ஆக, இப்போது மனதளவில் பழைய கட்டுப் பாடுகளில் இருந்து விட்டு விடுதலையாகி இருந்தேன். படிப்பதை தவிர வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்றே புத்தியும் செயலும் ஓடியது. கையில் தேவைக்கு அதிகமான காசு, புத்தம் புதிதாய் ஒரு கைனட்டிக் ஹோண்டா, புதிதாய் நண்பர்கள்.....தேடல் துவங்கியது.

கிரிக்கெட்,சினிமா,மலையாள பிட்டு படங்கள், நண்பனின் வீட்டில் நீலப்படங்கள் பார்ப்பது, ஒரு ஹோட்டல் விடாமல் படையெடுத்தது,வாரம் ஒரு தடவையாவது கொடைக்கானலில் போய் சுற்றி வருவது, மிக சந்தோஷமான நாட்கள் அவை....தண்ணியும், தம்மும் எனக்கு பிடிக்காததனால் தப்பியது அல்லது தப்பினேன். பரிசோதனைக் கூடத்து எலியைப் போல வாழ்க்கையின் கூறுகளை அலசிய காலம் அது.எல்லைகள் தாண்டுவதில் தயக்கமோ அல்லது பயமோ இருந்திருக்கலாம். அதனால் பெரிதாய் சேதாரம் இல்லாமல் இயல்பானவனாகவே இருந்தேன்.

கிரிக்கெட்டில் நான் அருமையான லெக் ஸ்பின்னர், எந்தவொரு பேட்ஸ்மேனையும் ஐந்திலிருந்து ஆறு பந்துகளுக்குள் தவறு செய்ய வைக்கும் திறமை இருந்தது. கொஞ்சம் முனைப்பு காட்டியிருந்தால் இன்னேரம் நீங்கள் என்னை மைதானத்திலும், விளம்பரஙகளிலும் பார்த்து தொலைத்திருப்பீர்கள்....உங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம் தப்பித்தீர்கள். நூறு மதிப்பெண்களுக்கு படித்த காலம் போய் பாஸ் மார்க்கை குறிவைத்து படிக்க ஆரம்பித்திருந்தேன். சமயஙகளில் வெற்றியும் கிடைத்தது. அரியர்களுக்கு அஞ்சாநெஞ்சனாய் காலம் என்னை மாற்றியிருந்தது.

பெண்கள், தோழிகள்,காதலிகளை பற்றி தனியேதான் எழுத வேண்டும். அந்த நாட்களில் நான் முழு நேர காதலனாகவே இருந்தேன்.யாரகிலும் ஒருத்தி என்னுடைய நினைவுகளில் தொடர்ச்சியாய் வசித்திருந்தார்கள்.பல நேரங்களில் ஒருதலையாகவும், சில சமயங்களில் இருதலையாகவும்.... என் அருகாமையை அவர்கள் விரும்பினார்கள் அல்லது நான் அதை தக்க வைப்பதிற்காக உழைத்தேன் என்றும் சொல்லலாம். உனக்கான அன்பும், அக்கறையும்,நேரமும் என்னிடத்தில் எப்போதும் இருக்கிறது என்பதை புரிய வைத்தலே என் காதலின் வரையறைகளாய் இருந்தன.

கல்லூரியின் நான்காம் வருடம் பதின்ம வயதில் வராதாகையால்...முடிவாய் சில எண்ணங்கள். வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு ரசிப்பது என்பது இந்த பருவத்தில் மட்டுமே சாத்தியமாகிறது என நினைக்கிறேன். கல்வி மட்டுமே என்கிற கால கட்டாயத்தில், அதைத் தாண்டிய உலகம் மீதான ஈர்ப்பும், அதை புரிந்து கொள்வதற்கான குருட்டு தைரியமும், திருட்டுத் தனங்களுமே அந்த நினைவுகளை இன்றைக்கும் சுவாரசியமானதாக தக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

நேற்றைக்கு எப்படியிருந்தேன் என்பதோ, நாளைக்கு எப்படியிருப்பேன் என்பதோ முக்கியமில்லை....இன்றைக்கு நான் என் சுற்றத்தின் விருப்பத்திற்குறியவனாய் இருக்கிறேனா என்பதே என் வரையில் முக்கியம். அதற்கான முயற்சியே என் வாழ்க்கை !

இது தொடர் பதிவாகையால் நான் ரசிக்கும், விரும்பும், மதிக்கும்...இப்படி ஏகப்பட்ட பில்ட்டப்புகளை தக்க வைத்திருக்கும் மங்கை, காட்டாறு இருவரையும் அழைத்திட விரும்புகிறேன்.

இருவரும் மூத்த அல்லது வயதான பதிவர்கள் என்பதால் இந்த அழைப்பினை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் உரிமையினை அவர்களிடமே விட்டு விடுகிறேன் ....ஹி...ஹி...



அஞ்சலி !

என்னை கடந்து போன காதலிகளுக்கும்....

அதில் கரைந்து போன காதல்களுக்கும் ....

Thursday, February 11, 2010

கேட்டதில் பிடித்தது...!



When your down and troubled
And you need a helping hand
And nothing, whoa nothing is going right.
Close your eyes and think of me
And soon I will be there
To brighten up even your darkest nights.
You just call out my name,
And you know whereever I am
I'll come running, oh yeah baby
To see you again.
Winter, spring , summer, or fall,
All you have to do is call
And I'll be there, yeah, yeah, yeah.
You've got a freind.
If the sky above you
Should turn dark and full of clouds
And that old north wind should begin to blow
Keep your head together and call my name out loud
And soon I will be knocking upon your door.
You just call out my name and you know where ever I am
I'll come running to see you again.
Winter, Spring, summer or fall
All you got to do is call
And I'll be there, yeah, yeah, yeah.
Hey, ain't it good to know that you've got a friend?
People can be so cold.
They'll hurt you and desert you.
Well they'll take your soul if you let them.
Oh yeah, but don't you let them.
You just call out my name and you know wherever I am
I'll come running to see you again.
Oh babe, don't you know that,
Winter Spring summer or fall,
Hey now, all you've got to do is call.
Lord, I'll be there, yes I will.
You've got a friend.
You've got a friend.
Ain't it good to know you've got a friend.
Ain't it good to know you've got a friend.
You've got a friend.

இனியும் எழுதுவேன். . . .

அநே(னே)கமாய் தினமும் பதிவெழுதும் தமிழ் பதிவன் நானாகத்தான் இருக்க முடியும்.ஆனால் இந்த பதிவில் எழுதாததன் சூன்யம் நிரம்பிக் கிடக்கிறது..வாசிப்புக்கு எழுதியதை தாண்டி, வசீகர எழுத்தின் நுட்பம் பழகவே இந்த பதிவு என்கிற குறிக்கோள் இப்போது தூசியும் துருவும் பிடித்து போய் கிடக்கிறது.

நான் தினமும் எழுதுகிற எழுத்தில் உயிர் இல்லையென்பது இப்போதுதான் உறைத்திருக்கிறது. கலைத்துப் போட்ட சில வாக்கியங்களை முன்னும் பின்னும் நகர்த்தி அடுக்குவதைப் போலத்தானிருக்கிறது அந்த நுட்ப பதிவுகள். ஆயிரம் பேருக்கும் குறையாமல் வாசிக்கிற நிர்பந்தமும், கிடைத்திருக்கிற ஒளிவட்டத்தை தக்கவைக்கும் பேராசையாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்....அங்கே!

தொலைந்து போன நாட்களை நினைத்துப் புலம்புக்கொண்டிருக்கிற நேரத்தில் எதையாவது எழுதித் துவக்குவோம் என்றே இந்த பதிவினை மீள ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் பதிவுலகம் நிறையவே மாறிவிட்டது.....சுண்டைக்காய் முதல் சுடலைமாடசாமி வரை பிரித்து மேய்கிறார்கள்.

தமிழ்மணம் பக்கம் போய் மாதக் கணக்குகள் ஆகி விட்டது. மதியாதார் தலைவாசல். . . .

விண்ணை தாண்டி வருவாயா !, கௌதம் வாசுதேவன் மேனனின் படம். எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றன ரஹ்மானின் இசை. . . .இதில் எனக்கொரு நெருடல். Pink Floyd ன் Wish you were here... பாடலின் படிமத்தில் ஒத்தியெடுத்தாற் போல ஒரு பாட்டை ரஹ்மான் தந்திருக்கிறார். கீழே இரண்டு பாடல்களையும் தந்திருக்கிறேன்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

WISH U WERE HERE...


நம்ம ரஹ்மானின் ஆரோமளே...

இதை ஈயடிச்சான் காப்பி என்று சொல்ல முடியாவிட்டாலும், பாதிப்புகள் இருப்பதை மறைக்க முடியாது. என் மாதிரியான ஆட்களே கண்டு பிடித்து விட முடிகிற அபத்தம். ரகுமானுக்கே வெளிச்சம். . . .

எல்லோரும் ட்விட்டர்..ட்விட்டர் என உருகி மருகிக் கொண்டிருந்த போது, பஃப்ளிக் டாய்லெட் சுவரில் எழுதுகிற சாமாச்சாரமாய் நினைத்து, பெரிதாய் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். சமீபத்தில் யாகூ சாட்டில் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதற்கு மாற்றாய் இருக்கட்டுமென விட்டரின் பாதம் சரண் புகுந்தேன்.

இங்கே டவுசரை கழட்டும் விதமாய் இல்லாமல், மெலிதான சிரிப்புகளை தேக்கியவாறே நிமிடங்கள் நகர்ந்து போவதும் சுகமாய்த்தான் இருக்கிறது. டவுசருக்கும் அங்க ஒரு ஐடி கிரியேட் பண்ணியாச்சுல்ல....

இனி அதுலயும் எழுதுவேன். . . .













Saturday, February 6, 2010

டவுசரும் ட்விட்டரும்!

இனி நானும் ட்விட்டுவேனாக்கும்.

https://twitter.com/tavusarpandi

கலி முத்தீடுத்தோன்னா அதான் நானெல்லாம் ட்விட்றேன் . . . . ஹா...ஹா...ஹா

Tuesday, January 12, 2010

ஜென் கதைகள்....

ஜென் கதைகள் நாள்பட்ட ஒயின் போன்றது. அது தரும் கிறக்கமும், நெகிழ்வும் அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். பின் வரும் இனைப்பில் நிறையவே கதைகள் இருக்கிறது. அனுபவித்துப் பாருங்களேன்.....

http://www.rathinagiri.in/2008-02-10-13-37-12/2008-05-21-17-59-01.html

Friday, January 1, 2010

அல்வா கொடுக்க நினைச்சா....ஹி...ஹி...

பதிவெழுத பெரிதாய் ஆர்வம் இல்லாத காரணமே இந்த இடைவெளி....படிப்பவர்களுக்காய் எழுதிய நாட்கள் போய் எண்ணங்களை எழுத்தாய் மொழிபெயர்க்கும் வித்தையின் நுட்பம் பழகவே இந்த பதிவினை உருவாக்கினேன். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியெதையும் செய்யவில்லை என்பதே உண்மை.

நேற்றைக்கு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இந்த ஒலிகோப்பு சிக்கியது. அமெரிக்காவில் பிழைக்கப் போன ஒரு இந்திய தம்பதி சம்பந்தப்பட்டது. காதலாகி கசிந்து கல்யாணம் கட்டிக் கொள்ளாமல் குடும்பங்களின் கூட்டனி இம்சையால் கல்யாணித்துக் கொண்டவர்கள் போலிருக்கிறது.



கணவணின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட திருமதி, கணவனின் களவாணித் தனத்தினை எப்படி துப்பறிகிறார் என்பதை பற்றியதே இந்த ஒலிக்கோப்பு. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்குமென்கிற நல்லெண்ணத்திலேயே பகிர்ந்து கொள்கிறேன். அதாவது...நண்பர்களே நீங்கள் யாரும் அசட்டுத் தனமாய் இம்மாதிரி மாட்டிக் கொள்ள கூடாதென்கிற நல்லெண்ணத்தில்....