Wednesday, March 31, 2010

மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காகவே பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....

என்னை ஒரு முட்டாளாக என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை யாகவும் உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்கவும் முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

பங்காளிகளுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

(புதிதாய் யோசித்து எழுத சோம்பேறித்தனமாய் இருந்ததால், இது ஒரு மீள் பதிவு!)

Wednesday, March 17, 2010

கடன் தொல்லை தீர ஒரு அரிய்ய்ய்ய்ய்ய வாய்ப்பு ?

இதெல்லாம் சாத்தியமா?, நண்பர் திரு.செந்தில் கொடுத்துதவிய அரிய தகவல், யாருக்கேனும் இதனால் கடன் தீர்ந்தால், மேற்படி நண்பருக்கு உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கலாம்.

இனி மேட்டர் கீழே.....


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.

இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.

2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை
இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை

இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.

வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

இதைப் பற்றி நம்ம சித்தூர். முருகேசன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம் என இருக்கிறேன்.

Tuesday, March 16, 2010

சவுக்குக்கு ஒரு சவுக்கு !

பதிவுகள் தர்ற சுதந்திர உற்சாகத்துல தமிழ் பதிவுலகில் நாளாந்தம் கருத்து வெந்த சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொல்லி வைத்தாற் போல இவர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற இருபத்தி நாலு கேரட் சொக்க கொள்கைவாதிகள். மயிர் நீத்தால் உயிர் நீக்கும் தன்மானத்தவர்கள்.ஆரம்பத்தில் இவர்களின் கொனஷ்ட்டைகள் எரிச்சலாய் இருந்தாலும் நாளடைவில் காமெடி பீஸாய் கருதி கடந்து போய் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு ஒரு திரட்டியில் சவுக்கு என்பாரின் ஒரு பதிவினை காணக் கிடைத்தது. பதிவின் தலைப்பு ”கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே…”.

அடங்கொய்யால! வாசகர்களை கவர என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று அவரின் பதிவில் ஊடுருவினேன்.காவல்துறை மூன்று போராட்டங்களுக்கு அனுமதி தரவில்லையாம், கருணாநிதி பிரியாணி பொட்டலம் தந்தாராம்.ஹிண்டு ராம் ஹிந்தி பாட்டு போடறதா சொன்னாராம்.அதுக்கு, ஹிந்தி பாட்டுக்கு மட்டும், நாட்டுக்கு வேணாம்னு கருணாநிதி சொன்னாராம். அப்புறம் கருணாநிதியை வசைமாறி பொழிந்து முடித்திருக்கிறார் இந்த கொள்கைத் தங்கம்.

காவல்துறை அனுமதி மறுத்தா தடையை மீறின்னு சொல்லி போட்டோவுக்கு போஸ் குடுத்து படங்காட்டுவாங்களே...அதெல்லாம் இவருக்கு தெரியாது போல. . . ..

கருணாநிதியை வசைபாடும் இவர்கள் கண்ணுக்கு செயலலிதா என்றைக்குமே தெரியமாட்டார், இது இம்மாதிரியான ஆசாமிகளிடம் காணக்கிடைக்கும் ஆச்சர்யமான ஒற்றுமை. அந்த அம்மாவை ”ஈழத்தாய்” ன்னு சொல்லி தனியா சந்தோசப் படுவாகளோ என்னவோ. ஆனால் கொழுத்த திராவிட குஞ்சுகளாய் காட்டிக் கொள்ள பார்ப்பனீயம் வெங்காயம்னு வசதியா பேசீருவாங்க....

தமிழக மக்கள் உரிமை கழகம் என தன் பதிவுக்கு பெயர் வைத்திருக்கிறார். தமிழர் உரிமைக்காக இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என பதிவு முழுவதையும் மேய்ந்தால் அதில் பெரும்பாலும் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் பதிவுகள்தான் . அ.இ.அ.தி.மு.க வின் தீவிர விசுவாசியாக இருப்பாரோ என்கிற சந்தேகமே வந்து விட்டது எனக்கு....அம்மா மட்டும் இந்த பதிவினை பார்த்தால் சவுக்குக்கு பட்டு குஞ்சலம் கட்டினாலும் கட்டுவார்.....அத்தனை காட்டமாக கருணாநிதியை விமர்சித்திருக்கிறார்.

பதிவின் மேலே பிரபாகரனின் படம் வேறு. . . . ஈழத்தமிழ் பதிவர்களை குறிவைத்துப் போட்டிருக்கலாம். அதற்கு பதிவின் தலைப்பை தமிழர் உரிமை கழகம் என்றாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் எல்லா பதிவுகளிலும் கருணாநிதியை திட்ட முடியாதே என்பதற்காக தமிழகத்தை சேர்த்திருப்பார் போலும்.

தன்னை புத்திசாலியாக அவர் கருதிக் கொள்ளட்டும், அதற்காக வாசகனை முட்டாள் எனச் சொல்லும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது?, அந்த கோவத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு!. . . . அப்புறம் வரும் போது அவர் பதிவில் மூன்று பின்னூட்டங்கள் போட்டேன். அதில் ஒன்றை அவர் வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை....எனவே அந்த பின்னூட்டம் கீழே!

தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க....

அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு...அவருதான்யா சிங்கம்....யோசிங்க பாஸ்!

சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

Wednesday, March 3, 2010

சாருவுக்கு ஒரு வார்த்தை!

பரவசத்தில் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு ஆடவும் வேண்டாம்...

பின்னர் எதை பொத்துவது என தெரியாமல் அல்லல் படவும் வேண்டாம்....

Tuesday, March 2, 2010

நித்யானந்தருக்கு நன்றி...

நான் நித்யானந்தரின் செயல் பாடுகளை விமர்சன பதிவாக, ”ப்ளாஸ்டிக் புன்னகையும், நித்யானந்த அனுபவமும்” எழுத ஆரம்பித்து தொடர இருந்த சூழ்நிலையில் இன்றைக்கு சன் டிவியின் புண்ணியத்தால் பெரிதான ஆச்சர்யங்கள் ஏதுமில்லாமல் இத்தனை சீக்கிரத்தில் அவரின் ஆன்மீக வியாபாரம் முடிவுக்கு வந்ததை எண்ணி பரிதாபமே மிஞ்சுகிறது.

மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப் பட்டிருக்கும் அந்த வீடியோவில், நித்யானந்தர் என்கிற ராஜசேகரனுக்குள் இருக்கும் காதலும், காமமும் கடை விரிக்கப் பட்டிருக்கிறது.”உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கிற கவியரசரின் அனுபவ ஞானத்தின் வீர்யத்தை இனிவரும் நாட்களில் இவரின் விசயத்தில் நாம் காணப்போகிறோம்.

நேற்றுவரை அவரை ஆராதித்தவர்கள் இனிமேல், ”நான் அன்னிக்கே சொன்னேன்”...என்று தங்களை காத்துக் கொள்ளும் நாடகங்களும் அரங்கேறும். இனி வரிசையாய் சில பெண்கள் என்னை கெடுத்தார் என கிளம்பி வரலாம்.தொழில்(!) போட்டியால் எதிர்வரிசை சாமியார்கள் பண்ணிய செட்டப் என நித்யானந்த கோஷ்டியினர் சோக நாடகம் போடலாம்.

எது எப்படியோ, முற்றும் துறந்தவர் என்றும் எல்லாம் கடந்தவர் என்றும் தன்னைச் சுற்றி நிர்மானித்து வைத்திருந்த பிம்பம் உடைந்து சிதறியதை அந்த இளைஞர் வரும் நாட்களில் எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதே என்னுடைய ஆர்வமான எதிர்பார்ப்பு. CRISIS MANAGEMENT என்பது மிகச் சிரமமான ஒரு கலை. பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி தலைப்புக்கு வருவோம்.....

இனி வரும் நாட்களில், அவரின் இத்தனை நாளைய ஆன்மீகமும், போதனைகளும் மறந்து போய் ஒரு கீழ்த்தரமான மனிதராய் இந்த சமூகத்தால் பார்க்கப் படுவார், பரிகசிக்கப் படுவார். பொய்யான பிம்பங்களை கட்டமைப்பதில் உள்ள ஆபத்து இதுதான். எல்லாம் மாயை எனச் சொல்லும் இவர்கள் புகழுக்கும், பணத்துக்குமாய் கடவுள் வேஷம் கட்ட தயங்காதவர்கள் என்பது முரண் நகை.

இயல்பாய் இருத்தல் என்பது விலங்குகளில் மட்டுமே சாத்தியம். மனிதன் உடையனியத் துவங்கிய போதே இயல்பு விலகிவிட்டது.வேஷங்கள் என்பது இல்லாமல் மனிதம் இல்லையென்றாலும், மிகை வேஷங்களில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரையிலான வாழ்க்கையில் எனது பலம்,பலவீனங்களை பெரிதாய் மறைத்ததில்லை,இயல்பானவனாகவே இருந்திருக்கிறேன், அல்லது என்னை மற்றவர்களைக் காட்டிலுமான மிகை மனிதனாய் நிர்மானித்துக் கொள்ளும் முனைப்பும் இருந்ததில்லை.பொய்யான பாவனைகளினால் பிம்பங்களை கட்டமைக்காமல் போனதினால் சமயங்களில் எனக்கு பாதகமும் நேர்ந்திருக்கிறது.

அவ்வப்போது இது குறித்த கவலைகள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் இப்போது இதை எழுதும் சமயத்தில் இதுவரையிலான எனது நிலைப்பாடுகள் குறித்த பெருமிதமே ஓங்கியிருக்கிறது. இதற்காகவேனும் அந்த இளைஞருக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்......