Monday, August 2, 2010

டவுசரை கழட்டீட்டு.....

டவுசரை கழட்ட வேண்டிய நேரம் வந்தாச்சி...வில்லங்கமா யோசிக்காதீங்க!, அடுத்து என்னன்னு கடைசி வரில சொல்றேன்.வழிதவறி பதிவுலகம் பக்கமா வந்து ஆறு வருசம் ஓடிப் போச்சு, நானும் ரவுடிதான்...நானும் ரவுடிதான்னு வருசத்துக்கு ஒரு பேரோட ரவுண்ட் வந்தாச்சு.

நான் உள்ள வந்தப்ப தீவிரமா இயங்கிட்டு இருந்த பலரை இன்னைக்கு காணோம்.விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் மட்டுமே இப்ப இயங்கீட்டு இருக்காங்க...அதுல நம்மளும் ஒருத்தன்னு நெனைக்கும் போது..ம்ம்ம்ம்...அட கண்ணுல தண்ணி(இதான் நமக்கு நாமே திட்டம்..ஹி..ஹி).இங்கே எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் எவரும் இல்லை.எதிரிகளும் இல்லை....ஆனால் நட்பு கொண்டாடியிருக்கிறேன், எதிர் கூச்சல் இட்டு கோவத்தை காட்டியிருக்கிறேன்.

கடந்து போன இந்த வருடம், தனிப்பட்ட முறையில். தொழில் ரீதியாக நான் மரண அடி வாங்கிய ஆண்டு. அநேகமாய் தெருவுக்கு வந்த ஆண்டு என்றே சொல்லலாம்.மீண்டு விட முடியுமென்றாலும், வலிகளின் தீவிரம் தணித்த காரணிகளில் பதிவுலகத்திற்கும் பங்குண்டு.

அடையாளங்களை தூக்கிப் பிடித்து என்னை மிகை மனிதனாக காட்டிக் கொள்ளாததே, இன்னமும் இங்கே நிலைத்திருக்க காரணமாயிருக்கலாம்.விருப்பு வெறுப்பில்லாது வேடிக்கை பார்க்கிறவனாய் மட்டுமே இருந்ததினால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.சலிப்புகள் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்....

சதயம், பங்காளி,இரண்டாம் சொக்கன், யட்சன் வரிசையில் இனி டவுசர்பாண்டியும் எனது பதிவுலக சுவடுகளில் ஒன்றாயிருக்கும்.புதிய அவதாரங்கள் தொடரும்....பகவான் மட்டும்தான் அவதாரமெடுக்க முடியுமா என்ன?

எழுத வேண்டியது நிறைய இருக்கிறது....பிரபல பதிவராகாவிட்டாலும், அனைவருக்கும் பிடித்த பதிவராகவாவது இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.....

அதுனால...

டவுசரை கழட்டீட்டு வேட்டிய மடிச்சு கட்டீட்டு வேறோரு பெயர்ல விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்... :))

Monday, July 5, 2010

ஒரு பின்னூட்ட பதிவு...

பதிவர் மங்களூர் சிவா அவர்களின் பதிவுக்கு எதிர்வினையாற்றி திருவாளர் செந்தழல் ரவி அவர்களின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்....

பின்னூட்டம் வெளியிடப் படுமா என தெரியாத சூழலில் எனது பதிவில் அந்த பின்னூட்டத்தை பதிந்து வைப்பது அவசியம் என நினைக்கிறேன்...வரலாறு முக்கியமில்லையா! :)


//எங்கள் வீட்டு பெண்ணை அவதூறு செய்து எழுதியுள்ள இந்த பதிவுக்கு எதிர்வினை இது.//

சமீப நாட்களில் கிருபா நந்தினி மற்றும் தோழி என்கிற பெண்பதிவர்களை விமர்சிக்கும் போது எந்த மாதிரியான வார்த்தையாடல்களை உங்கள் பதிவில் பயன் படுத்தி இருந்தீர்கள் என்பதை உங்களின் சுயபரிசோதனைக்கே விட்டு விடுகிறேன்.....

திருவாளர் பைத்தியக்காரன் எழுதிய பதிவு, திருமதி சந்தன முல்லை அவர்களின் மேலான பார்வைக்கு அனுப்ப பட்ட பின்னரே, மகாகனம் பொருந்திய வினவு அவர்களின் பதிவில் வெளியிடப் பட்டது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் பதிந்திருக்கும் சூழலில்....

மங்களூர் சிவா மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நிரூபிக்கும் அல்லது மறுக்கும் தார்மீக உரிமை திருவாளர் பைத்தியக்காரனுக்கும், திருமதி சந்தனமுல்லைக்கும், மகாகனம் பொருந்திய வினவுக்கும்தான் இருக்கிறது....இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள் என புரியவில்லை.

மங்களூர் சிவாவின் பதிவிற்கு மறுப்பு சொல்ல வேண்டியது திருவாளர் பைத்தியக்காரனும், திருமதி சந்தன முல்லையும், மகாகனம் பொருந்திய வினவும்தானே தவிர நீங்கள் இல்லை.....

திருமதி.சந்தனமுல்லை தனது தனித்துவம் பாதுகாக்கப் பட வேண்டுமெனவும், தனக்காக எவரும் உள் நுழைவதை அவர் விரும்பவில்லை என, தனது அருமை கணவருக்கே தடை போட்ட தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையை நீங்கள் மதித்திருக்க வேண்டும்.

இந்த பதிவை இடுவதற்கு முன்னர் அவரிடம் அனுமதி கேட்டிருப்பீர்களேயானால் நீங்கள் உஙகள் வீட்டு பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிப்பவராக எடுத்து கொண்டிருக்கலாம். ஒரு வேளை நீங்கள் கேட்டு திருமதி சந்தனமுல்லை உங்களுக்கு அனுமதி அளித்திருப்பாரேயானால் அவரின் ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மீதான மரியாதை நொறுங்கிப் போய்விடுகிறது.

மங்களூர் சிவாவை கடித்துக் குதறுவதாக நினைத்து நீங்கள் அசிங்கப் படுத்தியிருப்பது உஙகள் வீட்டுப் பெண்ணைத்தான், மீண்டும் ஒரு தடவை செந்தழல் ஒரு அவசர கருத்தாளர் என்பதை நிருவியிருக்கிறீர்கள்....


.

Sunday, July 4, 2010

வாக்கா...வாக்கா....

உலக கோப்பை கால்பந்து இறுதி கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நான் கொஞ்சம் எதிர்பாராத அணிகள் எல்லாம் அரை இறுதிக்குள் வந்து விட்டன. விடிய விடிய முழித்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். நான்கில் மூன்று ஐரோப்பிய அணிகள்....காலாலே கவிதை எழுதிய தென் அமெரிக்க அணிகள் இல்லாத நிலையில் இனி கோப்பை ஸ்பெயினுக்கு போனால் சந்தோஷப் படுவேன்.

ஜெர்மனி வீரர்கள் நிச்சயம் பேயாட்டம் ஆடுகிறார்கள்....அர்ஜெண்டினா பரிதாபமாய் சரணடைந்தது. சமீபத்தில் ரொம்பவே வருத்தப் பட்ட தருணம் அது!

ஊதித் தொலைக்கிறேனென ரசிகர்கள் ஊதிய ஊதல் சத்தம் நமக்கு காது கிழிகிறது, எப்படித்தான் விளையாடுகிறார்களோ?.

வீரர்களுக்கு இனையாக டிவி கேமராக்களின் கவனிப்பை பெற்றவர் மரடோனா....உணர்ச்சி பிழம்பாய் நவரசங்களையும் காட்டினார்.எனக்கு அடிக்கடி நம்ம டி.ஆர் நினைவு வந்து தொலைத்தது. எங்க அம்மா மரடோனா பத்தி சொன்ன ஒரு கமெண்ட் இந்த இடத்தில் பதிந்து வைக்கனும்....அவங்க சொன்னது

“இவன் ஏண்டா பந்து மாதிரி இங்கயும் அங்கயும் உருண்டுட்டு இருக்கான் ”

தென் ஆப்ரிக்கா நிஜமாகவே அசத்தி விட்டார்கள் , குளறு படிகள் இல்லாத உலக கோப்பையாக இது இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும், மைதானத்துக்குள் பெரிதாக காவலர்களையோ அல்லது அதிரடி படையினரையோ காண முடியவில்லை....

அழகான பெண் ரசிகைகளை காணமுடியவில்லை அல்லது காட்ட வில்லை....

இந்த குறையை தீர்க்க ஷக்கீராவின் வாக்கா வாக்கா....கீழே,

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு ஒரு அதீத அதிர்வு இந்த பெண்ணிடம் இருக்கிறது...அதிர்வுன்ன உடனே ஏடா கூடமா எதையாவது பார்த்துட்டு இருக்காதீங்க....ஹி..ஹி....நான் சொல்ல வந்தது எனர்ஜி லெவல்.

காமரூனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய பாடல்தான் இது, 1986 களில் Golden sounds என்ற் குழுவின் பாடலாக இதை வெளியிட்டிருந்தனர்.இரண்டாம் உலகபோரில் கலந்து கொண்ட ஆப்ரிக்க வீரர்களின் நினைவை போற்றும் இந்த பாடலை ஷக்கீரா உலககோப்பை கால்பந்துக்கு பிரபலமாக்கி விட்டார்.....ஆனால் இந்த பாடல் உலக கோப்பைக்கு எந்த வகையிலும் பொருந்தாது என்கிற கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை...

வாக்கா வாக்கா...ன்னா ”கடமையை செய்”...ன்னு அர்த்தம் வரும்

முதல்ல ஒரிஜினல் அப்புறம் ஷக்கீரா....பார்த்துட்டு சொல்லுங்க எது டாப்புன்னு....

ஒரிஜினல்...




இது கொலம்பிய குத்துவிளக்கு ஷக்கீரா பாடினது....


Saturday, June 26, 2010

கவித மாதிரி...ஆனா கவித இல்ல...!




நீ எழுதிய முதல் காதல் கடிதத்தை

என்னிடம்தானே கொடுத்திருப்பாய்!

உன் வீட்டு குப்பைத் தொட்டியாய் இருந்திருக்கலாம்....

ம்ம்ம்ம்ம்.....



இதோட காப்பிரைட், டீரைட் எல்லாம் என்கிட்டதான் இருக்கு!, அதுனால யார் வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம் :)

Sunday, June 20, 2010

எழுத மேட்டர் இல்லை அதான்......!

எழுதி நாளாகிறது !

இதனால் யார் குடியும் கெட்டுப் போகவில்லை என்பதுதான் நல்ல செய்தி.

இடைக்காலத்தில் என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தேன்.... ”கொலதெய்வம்” நமீதாவை ட்விட்டரில் தொட்டதை வரலாற்று சம்பவமாய் பதிந்து வைக்கலாம்.”இப்பல்லாம் நமீதாவோட அடிக்கடி பேசுறேன் பாஸ், ராத்திரி ஆனா அந்த புள்ள மச்சானுக்கு குட்நைட் சொல்லாம தூங்கறதே இல்லைன்னு இனி ட்விட்டர் புரியாதவனிடம் கதைவிடலாம்.....ம்ம்ம்ம்

சமீபத்தைய நர்சிம், முல்லை ”சதிராட்ட”த்தில் நானும் நர்சிம் பக்கமாய் நின்று எதிர் பதிவுகளில் எல்லாம் போய் கூவி வைத்தேன். இத்தனைக்கும் நர்சிம்மின் எழுத்துக்களையோ, முல்லையின் பதிவுகளையோ பெரிதாய் வாசித்ததில்லை. ஆனால் நர்சிம் தரப்பு நியாயங்கள் கலாச்சார போர்வையின் கீழே போட்டு மிதிக்கப் பட்டதாக நம்பினேன்....மற்றபடி இருவரைப் பற்றியும் எனக்கு பெரிதான அபிப்பிராயங்கள் இல்லை.

”பெரியார்” படத்திற்கு பெரியவர் இசையமைக்கச் சொல்லி கேட்டும் இசைஞானி மறுத்துவிட்ட வருத்தமே, செம்மொழி மாநாட்டு பாடல் வாய்ப்பில் ஓரம் கட்டப் பட்டாராம்.ஞானியால் புயலுக்கு வாய்ப்பு....நம்ப தகுந்த ஒருவர் சொன்ன சேதி இது....நான் நம்பி விட்டேன்!

சாரு நிவேதிதாவின் பதிவுகளை நெம்ப காலமாகவே வாசித்து வருகிறேன்...அருமையான பத்தி எழுத்தாளர் ஆனால் சமீப காலமாக மனுஷன் எழுத்துலக வடிவேலுவாய் சிரிக்க வைக்கிறார். அவர் போடும் ஜட்டியில் இருந்து , வீட்டு நாய் மூச்சா போன கதை வரை எழுதிவிட்டு அதை ஒலக இலக்கியமாய் ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் வாசகர் மெயில் என்கிற போர்வையில் அவரே கஷ்டப்பட்டு ஒளிவட்டம் ஏற்றுவது அபத்தமாய் இருக்கிறது. அவர் தளத்துக்குப் போனால் கவலை மறந்து சிரித்து விட்டு வர நான் கேரண்டி...சமீபத்தய காமெடி ஷேக்ஸ்பியரின் ஈ-மெயில் ஐடி அவரிடம் கிடைக்கலாம் என்பதாக ஒரு பில்ட்டப்!.

நண்பர் கொடுத்த நிறைய ஆங்கில பட டிவிடி க்களை கையில் வைத்துக் கொண்டு பார்க்க நேரமில்லாது அலைந்து கொண்டிருக்கிறேன்.... விமர்சிக்கிறேன் பேர்வழி என ஒவ்வொரு படத்தைப் பற்றியும் பதிவுபோட்டு உங்களை இம்சை படுத்தமாட்டேன் என்கிற உத்திரவாதத்தை மட்டும் இப்போதைக்கு தர முடியும்.

Monday, May 31, 2010

நர்சிம், சந்தனமுல்லை தொடர்பான வினவின் பதிவிலிட்ட பின்னூட்டம்

இந்த பதிவினை படித்த வரையில்,பிரச்சினையை துவக்கியது நர்சிம் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இதுல எதுக்கு அவன் பருப்பு, இவங்க பித்தளைன்னு கலர் பூசூறீங்கன்னு தெரியலை....

உங்களுக்கு பார்ப்பனர்களை திட்ட ஒரு வாய்ப்பு, அதை செம்மையாய் செய்ய சந்தன முல்லை என்கிற பிற்படுத்தப்பட்ட சமூக பெண்மணி கையில் கிடைத்திருக்கிறார். வன்புணர்ச்சி, வெங்காயம்னு....நரசிம்மை போட்டுத் தாக்குவதாய் நினைத்துக் கொண்டு சந்தனமுல்லையினை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறீர்கள்.

இந்த கேப்பில் இடது சாரி இம்சையை வேறு கடை விரித்திருக்கிறீர்கள்.கார்க்கி,அபி அப்பா, லதானந்த், மங்களூர் சிவா இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது கூட வன்புணர்ச்சிதான்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கே நீங்கள் உட்பட எவனும் யோக்கியனில்லை. சுதந்திரவெளி...கருத்து கந்தசாமியாய் தீர்ப்புச் சொல்லி மற்றவனை காயடிக்க துடிக்கும் கருத்துச் சுதந்திரதை உங்களுக்கு எது தந்ததோ அதே சுதந்திரம் நர்சிம் மற்றும் பிறருக்கு உண்டு.

.வம்புச் சண்டைக்குப் போகக் கூடாது, அதே நேரத்துல வந்த சண்டைய விடக் கூடாது....அதுதான் இங்கே நடந்திருக்கிறது. கத்தியை தூக்கும் போதே கத்தியால் இறக்க தயாராக இருக்க வேண்டும்.

போய் அம்மாவிடமும், அய்யாவிடமும் குண்டியை சொறிந்து கொண்டு பதவிக்காக நிற்கும் உங்கள் தோழர்களை புத்தி சொல்லி அழைத்துவாருங்கள்....அதை விடுத்து இம்மாதிரியான ஒளிவட்டங்களாய் நீங்கள் போதிப்பது உங்களின் அம்மணத்தையே வெளிச்சமாக்குகிறது.

Sunday, May 9, 2010

இதுதான் குறும்படம்.....



தமிழில் குறும்பட இயக்கம் பெரிய அளவில் வளராததன் காரணம், வருமான வாய்ப்பு இல்லாததுதான் என நினைக்கிறேன். நான் பார்த்த சில தமிழ் குறும்படஙகள், இனி தமிழில் குறும்படங்களே பார்க்கக் கூடாது என்கிற நினைப்பினை தந்தன என்றால் மிகையில்லை. உதாரணத்திற்கு பதிவர் உண்மைத் தமிழனின் படத்தினைச் சொல்லலாம்.

கருத்தாக்கம், காட்சிகளை பிரித்தல், துல்லியமான படத் தொகுப்பு இருந்தால் மட்டுமே சுவாரசியம் தரக்கூடியவை குறும்படங்கள். சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் தான் மேலே நீங்கள் பார்ப்பது. வசனம் எதுவுமே இல்லை,ஆனால் காட்சிகளை திட்டமிட்டதும், தொகுத்ததும்தான் இந்த படத்தின் சிறப்பாய் நினைக்கிறேன். குறும் படமெடுக்க ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது.