Friday, April 16, 2010

......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்



என் பால்யத்தின் நினைவில் உறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று. சில நிகழ்வுகள் எத்தனை காலமானாலும் சூடாய்,சுகமாய் நினைத்த மாத்திரத்தில் நம்மைச் சாய்த்துவிடும். அப்படியான தருணங்களில் ஒன்றுதான் குர்பானி, அப்பாவின் கையைப் பிடித்துகொண்டு போய் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

விளக்குகள் ஜொலிக்க திரை உயர்வதும், வெதுவெதுப்பான இறுக்கத்தில் பாப்கார்ன் நெடி சூழ்ந்த இருட்டில் திரையில் மிளிர்ந்த காட்சிகளை அம்மாவின் புடவை தலைப்பை இழுத்து தலையில் போர்த்திக் கொண்டு பார்த்ததெல்லாம் நேற்றுத்தான் நடந்தது போலிருக்கிறது.

அவ்வப்போதைய, இத்தகைய நினைவுகள்தான் நான் இன்னமும் தொலைந்து போகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது....உணர்த்திக் கொண்டிருக்கும்....ம்ம்ம்ம்ம்ம்ம்

2 comments:

  1. //இத்தகைய நினைவுகள்தான் நான் இன்னமும் தொலைந்து போகவில்லை என்பதை எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.//

    உண்மை தான்...இதுக்குத்தான் மெமரி ட்ரிக்கர்ஸ் னு சொல்றது...இதமான நினைவுகள்

    ReplyDelete