Wednesday, March 31, 2010

மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே!

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காகவே பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....

என்னை ஒரு முட்டாளாக என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை யாகவும் உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்கவும் முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

பங்காளிகளுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

(புதிதாய் யோசித்து எழுத சோம்பேறித்தனமாய் இருந்ததால், இது ஒரு மீள் பதிவு!)

1 comment:

  1. வருஷா வருஷம் ஏப்ரல் ஒன்னை நியாபகப் படுத்துவது ஒரே ஆள் தான்...:))

    ReplyDelete